பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

173


இருவகையுள் ஒரு வகை ஒரு புதிய பொருளை உண்டாக்குகின்றது. இப்புதிய பொருள் திடநிலையிலுள்ள பண்படா (Crude) எண்ணெயைக் குழம்பு நிலைக்குக் மாற்றித் திரவநிலைக்குச் கொண்டு வருகின்றது. கைவிடப் பெற்ற சில எண்ணெய்க் கிணறுகளிலுள்ள எண்ணெய், பம்பு வழியாக அனுப்ப முடியாத தடித்த நிலையில் உள்ளது. இதை இம்மூட்டை பூச்சிகளைக் கொண்டு திரவநிலையாக்கப் பெறுகின்றது. இரண்டாவது வகை மூட்டைப்பூச்சிகள் இந்த எண்ணெய்க் குழாய்களின் உட்புறச் சுவர்களில் ஒட்டிக் கொள்வதைத் தடுத்து எண்ணெயின் பாகுநிலையைக் (Wiscosity) குறைத்து ஒட்டத்தை மிகுவிக்கின்றது.


மலட்டுப் பெண் செயற்கை முறையில் கருத்தரிப்பு : 'மலடி வயிற்றில் ஒரு மகன் போலே, புதையல் எடுத்த ஒரு தனம் போலே' என்பது ஒரு திருப்புகழ் அடிகள். 'புதையலில் தனம் கிடைத்தல்' நடைபெறக் கூடியது; சிலருக்குக் கிடைத்ததாகவும் செய்தி உள்ளது. ஆனால் மலடிக்கு ஒரு மகன் பிறத்தல் என்பது சொல்லளவில்தான் இருந்து வந்தது. இன்றைய அறிவியல் இதனையும் மெய்ப்பித்து விட்டது. அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலத்தைச் சார்ந்த இருபெண்கள் 'மலடிகள்’ என்று மெய்ப்பிக்கப் பெற்றவர்கள். அதாவது இவர்கள் சூற்பைகளில் முட்டையணுக்கள் உண்டாவதில்லை. லாஸ்ஏஞ்சல்ஸ் என்ற மருத்துமனையில் இவர்களிடம் கருத்தரிப்புச் செய்வித்து வெற்றிகரமாகக் கருவுயிர்த்தலையும் நிகழ்த்தியுள்ளனர், அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள்.

இந்த இருபெண்களின் கணவன்மார்களின் விந்தணுக்கள் வேறு இருபெண்களின் கருப்பைக்குள் செயற்கை முறையில் செலுத்தப் பெற்றன. இதனால் அந்தப் பெண்கள் கருவுற்றனர். பின்னர் அந்தப் பெண்களின் கருப்பையில் வளர்ந்து வந்த கருக்கள் வெளியே எடுக்கப் பெற்று இந்த மலட்டுப் பெண்களின் கருப்பைக்குள் பொருத்தப் பெற்றன. இந்தப் பெண்களின் வயிற்றில் கருக்கள் வளர்ந்து வந்தன, உரிய காலத்தில் அவர்கள் மகப்பேறும் அடைந்தனர்.20


20. பலராமன் பிறப்பு : இச்செயல் பலராமனின் பிறப்பை

நினைக்கச் செய்கின்றது. கம்சனுக்குப் பயந்து,