பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் +44 உடனே ஆணாகம் மாறிய விந்தையை ஈண்டு நினைவு கூரலாம். சில முனிவர்களின் பிறப்பு விலங்குகளின்மூலம் ஏற்பட்டதாக மணிமேகலை என்ற நூலால் அறிகின்றோம். இயற்கையின் விநோதத்தை இங்ங்னம் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. ஆணுறுப்புகளில் விரைகளின் பங்கு அதிகமானதால் அதுபற்றிய செய்திகள் விரிவாக விளக்கப் பெற்றன. (ii) stc%&) lósv (Epididymis} விரைகள் எண்ணற்ற மிக நுண்ணிய சுருண்ட குழல்களானவை என்பதை முன்னர் அறிந்தோம். இத்தச் சிறுகுழல்கள் படிப்படியாக ஒருங்கிணைந்து விரைகளின் ஒருபக்கமாகக் கிளம்பி வந்து ஒன்று சேர்ந்த உறுப்பே எபிடிடைமிஸ் என்பது. இந்த உறுப்பில்தான் வித்தணுக்கள் முழுவளர்ச்சியைப் பெறுகின்றன. இந்த உறுப்பு விரைகளையொட்டி நீளவாக்கில் இருப்பதுடன் அவற்றுடன் நெருங்கி ஒட்டிக் கொண்டும் உள்ளது. இத்த உறுப்பு வளைந்து சுருண்ட குழல்களாகலானது. இது கிட்டத்தட்ட இரண்டங்குல நீளமும் கால் அங்குல அகலமுடையதாக இருப்பினும், இதனுள் அமைந்த குழல் மிக நீண்டதாகும். இந்த உறுப்பினைப் பிரித்து அதன் குழலை நீட்டினால் அது கிட்டத்தட்ட 20 அடி இருக்கும். இதுவும் மானிட உடலின் ஒரு வியத்தகு அமைப்பாகும். இக்குழலின் குறுக்களவு 11.60 அங்குலம்தான் உள்ளது. அதாவது கிட்டத்தட்ட கதர் துல் அளவுதான கனமாக இருக்கும். எபிடிடைமிலின் கீழ்நுனி விந்தேறு குழல் was deerans) எனப்படும் சற்று ஒரு பெரிய குழலுடன் இணைகின்றது. 1. ஆன்மகன் அசலன் நான்மகன் சிருங்கி புலிமகன் விரிஞ்சி, புரையோர் போற்றும் நரிமகன் அல்லனோ கேசகம்ளன்? என்பது ஆடித்திரன் வாக்கு மணிமேகலை - 65-65 அடிகள்