பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

191


வாசகன் இதழில் வெளிவந்த குறிப்பிடத்தகுந்த கட்டுரைகள் இவை.

வாசகன் சாதனை என்று குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டியது அதன் ஏழாவது இதழ் ஆகும்.

உண்மையில் அது ஒரு 'இதழ்' அல்லது ஏடு இல்லை. ஒரு தனிப் புத்தகம் அது. பதினொரு சிறுகதைகளின் தொகுப்பு

‘வாசகன்—ஒரு தலைமுறையின் பதினொன்று சிறுகதைகள் என்றே அது பெயரிட்டிருந்தது அதில் கண்ட அறிமுகம்

‘இந்த பதினொன்று சிறுகதைகள்.

ஒரு தலைமுறையின் தரிசனங்கள் வெளிப்பாடுகள், கோபங்கள், புழுக்கங்கள், முறுவல்கள், முணுமுணுப்புகள், தன்னுணர்வுகள்.

இந்த எல்லாக் கதைக்குள்ளும் இருக்கும் ஒவ்வொரு இளைஞர்களும் வெளியிலும் இருக்கிறார்கள்.

எழுதியவர்களாக, படிப்பவர்களாக,

நீங்களாக, நாங்களாக,

இவை இந்த தலைமுறையின் நிஜங்கள்.

இத்தொகுப்பில் உள்ள கதைகள்

1. நான் பர்ஸ் திருடிய நாள்—ஆதவன்

2. இருட்டில் நின்ற...—சுப்ரமண்ய ராஜு

3. அந்தத் தெருவின் முடிவில் ஒரு சுடுகாடு—ஜெயபாரதி

4. விளிம்பு—பாலகுமாரன்

5. நடப்பு—வண்ணதாசன்

5. 29—மாலன்

7. ஒரு கடிகாரத்தைச் சுற்றும் கனமான முட்கள்—இந்துமதி

8. நேர்க்கோடுகளும் கோணல் கோடுகளும்—எம். சுப்பிரமணியம்

9. பார்ட்டி—ஸிந்துஜா -

10. புதியதோர் வேள்வியின் துவக்கம்—கபந்தன்

11. கோட்டு-கலாஸ்ரீ

இலக்கிய ரசிகர்கள் படிக்க வேண்டிய நல்ல சிறுகதைத் தொகுப்பு இது.