பக்கம்:தமிழ்க் காதல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை ஆராய்ச்சி

19


அகத்திணை ஆராய்ச்சி பன்னிரண்டடி வரையுள்ள பாடல்களில் முதல் கரு உரி ஒத்தும், முப்பத்தொன்றடி வரையுள்ள பாடல்களில் முதல் கரு உரி விரிந்தும் நிற்றலை மேலே விளக்கினோம். ஆதலின் முவ்வகைப் பொருளாட்சியே முவ்வகை அடிக்கணக்கிற்கு ஏதுவாயிற்று என்பது என் துணிபு. இத்துணிபிற்கு எடுத்துக் காட்டாக மூன்று தொகையிலிருந்தும் கபிலர் பாடல்களையே தருதும்: H. குறுந்தொகை - 153 குன்றக் கூகை குழறினும் முன்றிற் பலவின் இருஞ்சினைக் கலைபாய்ந்துகளினும் அஞ்சுமன் அளித்தென் ைெரஞ்சம் இனியே ஆரிருட் கங்குல் அவர்வரிற் சாரல் நீளிடைச் செலவா னாதே. நற்றிணை - 353 ஆளில் பெண்டிர் தாளிற் செய்த துணங்குநுண் பனுவல் போலக் கணங்கொள ஆடுமழை தவழுங் கோடுயர் நெடுவரை முடமுதிர் பலவின் குடமருள் பெரும்பழம் கல்லுழு குறவர் காதல் மடமகள் கருவிரல் மந்திக்கு வருவிருந் தயரும் வான்றோய் வெற்ப சான்றோ யல்லையெங் காமங் கனிவ தாயினும் யாமத்து இரும்புலி தொலைத்த பெருங்கை யானை வெஞ்சின வுருமின் உரறும் அஞ்சுவரு சிறுநெறி வருத லானே. அகநானூறு - 80 ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கிற் கோடை யவ்வளி குழலிசை யாகப் பாடின் னருவிப் பணிநீ ரின்னிசை தோடமை முழவின் துதைகுர லாகக் கணக்கலை யிகுக்குங் கடுங்குரற் றும்பொடு மலைப்பூஞ் சாரல் வண்டு யாழாக இன்பல் லிமிழிசை கேட்டுக் கலிசிறந்து மந்தி நல்லவை மருள்வன நோக்கக் கழைவள ரடுக்கத் தியலி யாடுமயில் விழவுக்கள விறலியிற் றோன்று நாடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/33&oldid=1237131" இலிருந்து மீள்விக்கப்பட்டது