தமிழ்ச் செல்வம் 65
அரவரை அழகனை
அடியிணை பணிமினே
என்று பாடிப் பரவுகின்றார்.
அங்குள்ளவர் ஞானசம்பந்தர்க்குச் சந்திரன் சூரியன் பிரமன் இந்திரன் முதலியோர் வழிபட்டது. இத்திருப்பதி என்று கூறக்ே இப்போது அது கோயிலடிப்பாளையமாக இருக் கின்றது. கடற்கானற்சோலை நல்லூர்ப் பெருமணம பும்
ட்டு மகிழ்கின்றார்.
எழுப்பிய யோகவுணர்வை மயேந்திரப் பள்ளி வற்புறுத்துவதை ஞானசம்பந்தர் நோக்குகின்றார்.
“மாகணைந்து அலர்பொழில்
மயேந்திரப் பள்ளியுள் யோகணைந் தவன்கழல்
உணர்ந்திருந் துய்ம்மினே”
என்று இயம்புகின்றார்.
இனி அடுத்தபடியாக நம் சீர்காழி பின் கிழக்கி லுள்ள தென் திருமுல்லைவாயில் ஞானசம்பந்தரை அழைக்கிறது. -
5. திருமுல்லை வாயிலே அடைகின்ற ஞான சம்பந்தர் தெருவெல்லாம் முத்துக்கள் சிதறிக் கிடக்கும் அதன் நெய்தல் வளத்தை நேரிற் கண்டு வியக்கின்றார். கடலிலும் கடற்கரையிலும் இருக்கும் அவை தெருவுக்கு வருவானேன் என்று நினைத்து, கடல் அலைகள் எழுப்பும் ஓசை கேட்டு அஞ்சி
த.செ.-5