இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
158
தமிழ்நாடும் மொழியும்
நமது குறிக்கோளாகிய விடுதலையைப் பெறுவதற்கு நாம் நீண்ட நாள் போராடியிருப்பதை உள்ளத்திலே கொண்டு, அறிவாற்றலும், தளரா முயற்சியும், பண்பும், பணி செய்யும் தன்மையும் பெற்று, நாட்டின் நல்வாழ்வே நம் வாழ்வு எனக் கொண்டு, ஒற்றுமையும் உறுதியும் பெற்று, உயர்ந்துவிளங்க அயராது, தளராது உழைக்கவேண்டும்.
வாழ்க நம் நாடு!
வளர்க நம் பண்பு!