பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மக்களாட்சிக் காலம்

157


டியதொன்றாகும். எனவே அதற்கு அரசியலார் ஆவன செய்யவேண்டும். மக்களது நல்லெண்ணத்தைப் பெறுவ தொன்றே அரசியலாரின் குறிக்கோளாக இருக்கவேண்டும். எல்லா மக்களும் இன்னல் ஏதுமின்றி இன்பமுடன் வாழ வழிசெய்யவேண்டும். இதற்குரிய வழி யாது? இதோ ! கவியரசர் கண்ட கனவு !

"பாரதசமு தாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க
பாரதசமு தாயம் வாழ்கவே ஜய ஜய ஜய (பாரதி)
முப்பது கோடி ஜனங்களின் சங்க
              முழுமைக் கும்பொது உடமை!
ஒப்பில் லாத சமுதாயம்
              உலகத் துக்கொரு புதுமை - வாழ்க (பாரத)
இனிஒ ருவிதி செய்வோம் - அதை
              எந்த நாளும் காப்போம்
தனிஒ ருவனுக் குணவில்லையெனில்
              ஜகத்தினை அழித் திடுவோம் - வாழ்க (பாரத)
எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம்,
              எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர்நிறை, எல்லோரும் ஓர்விலை,
             எல்லோரும் இந்நாட்டு மன்னர் நாம்
             எல்லோரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
             எல்லோரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க"

(பாரதி)

கன்னித் தமிழன் கண்ட இக் கனவினை நனவாக்குவதே நமது கடமையாகும். கனவு நனவானுல் நானிலமும் வியக்கும் வண்ணம் நம் நாடு வளமுடன் வாழ்ந்து உலக நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டியாய் விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எனவே நம் நாட்டினர் அனைவரும்