பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 தமிழ் நூல் தொகுப்புக் கல்ை பொறுக்காமல் செங்குட்டுவன் அவர்கள் மேல் படை யெடுத்துச் சென்ருன் என்று வரலாறு கூறுகிறதென்ருல், அவனுக்கு முன்பே பாட்டன்மார் படையெடுத்துச் சென்ற வரலாறு அறிந்ததொன்றே. இந்த அடிப்படையுடன் நோக்குங்கால், - புறத்திரட் டாலும் தொல்காப்பிய உரைகளாலும் அறியப்பட்டுள்ள பதிற்றுப் பத்துப் பாடல்கள் நான்கனுள், இருங்கண் யானையொடு’ என்று தொடங்கும் பாடலிலும், இலங்கு தொடி மருப்பின் என்று தொடங்கும் பாடலிலும், மன்னனது வெளிநாட்டுப் பயணச்செலவு குறிப்பிடப் பட்டிருத்தலிலுைம், முதல்பாடல் புறத்திரட்டில் "பகை வயிற்சேறல்’ என்னும் தலைப்பின்கீழ்க் கொடுக்கப்பட்டிருத் தலிலுைம், இரண்டாவது பாடல் முன்னதற்கு இளைத்த தாய்த் தெரியவில்லை யாதலினலும், இவ்விரு பாடல்களையும், உதியஞ்சேரலுக்கு உரியதாகக் கருதப்படும் முதல்பத்தைச் சேர்ந்தவை எனக் கூறலாம். அடுத்து.- பத்தாம் பத்து, யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பற்றிக் கூடலூர் கிழாரால் பாடப்பட்டிருக்கலாம் என முன்பு கூறப்பட்டுள்ளது. புறத்திரட்டால் அறியப் பெற்றுள்ள, 'வந்தனென் பெரும கண்டெனென் செயற்கே... கடாஅ யானை முழங்கும் இடாஅ வேணி நின் பாசறை யோனே' என்னும் பாடலில், புலவர் அரசனைக் கண்டு வருவதற்காகப் பாசறைப் பக்கம் சென்ற செய்தி கூறப்பட்டிருத்தலானும், பாடலிடையே நன்கலன் ஈயும் நகைசால் இருக்கை" என அரசனது ஈகை சிறப்பிக்கப் பெற்றிருத்தலானும், இந்தச் செய்தி யானைக்கட்சேய் மாந் தரஞ்சேரல் இரும்பொறையைக் கூடலூர் கிழார் பாடியுள்ள புறநானுாற்றுப் பாடலோடு ஒத்து வராததால், இந்தப் பாடலைப் பத்தாம் பத்துக்கு உரிய பாடலாகக் கருதலாம். குதிரையைக் குறிக்கும் கலிமா என்னும் பெயர், இந்தப் பதிற்றுப் பத்துப் பாடலிலும், கூடலூர் கிழாரின் புறநானூற்றுப் பாடலிலும் வந்திருப்பது ஈண்டு எண்ணத் "தக்கது. பதிற்றுப் பத்து 339 இறுதியாக,- பதிற்றுப் பத்துப் பாடல் ஒன்றின் பிற் பகுதியாகிய பேணு தகு சிறப்பின்" என்று தொடங்கும் மூன்று அடிகளைக் காண்பாம் : இந்தப் பகுதியில், பெண் களைப் பற்றிய அந்தப்புரத்துச் செய்தி கூறப்பட்டுள்ளது. நச்சினர்க்கினியரும், தலைவி கூறுவதற்கு எடுத்துக் காட்டா கவே இந்தப் பாடலைக் குறிப்பிட்டுள்ளார். மன்னனுக்கு ஒருத் திக்குமேல் துணைவியர் இன்னும் சிலர் உளர் என்னும் சூழ்நிலையில் பின்னப்பட்டு இப்பாடற் பகுதி எடுத்தாளப்பட் டுள்ளது. இந்தப் பகுதி, யானைக்கட்சேயைக் கூடலூர்கிழார் பாடியுள்ள புறநானுாற்றுப் பாடலிலுள்ள, "ஒண்டொடி மகளிர்க்கு உறுதுணை யாகித் தன்துணை யாயம் மறந்தனன் கொல்லோ" என்னும் பகுதியோடு ஒத்து வருகின்றதல்லவா? எனவே, இந்தப் பதிற்றுப்பத்துப் பாடற்பகுதி, யானைக்கட் சேயைக் கூடலூர் கிழார் பாடியதாகக் கருதப்படும் பத்தாம் பத்தின் ஒரு பாடலைச் சேர்ந்ததாயிருக்கலாம் எனக் கருத லாம். இனம் தெரியாத பதிற்றுப் பத்துப் பாடல்கள் நான்கும், முதல் பத்துக்கும் பத்தாம் பத்துக்கும் இங்கே பங்கிடப் பெற்றுள்ளன. இந்த உய்த்துணர்வு தவருகவும் இருக்கவாம்சரியாகவும் இருக்கலாம். கிடைக்காத இரு பத்துக்களும் கிடைக்குங்கால்.உண்மை விளங்கும். மறைக்த மாயம் பதிற்றுப் பத்தின் முதல் பத்தும் இறுதிப் பத்தும் மறைந்த மாயம் எப்படியோ! இதில் மாயம் ஒன்றும் இல்ல்ல. ஒரு நூலின் முதல் பகுதியும் இறுதிப் பகுதியும் கிழிந்து அழிந்து போவது இயல்பே. இந்தக் காலத்திலும் - சிறுவர் கள் என்றென்ன - பெரியவர்கள் வைத்துப் பயன்படுத்தும் அச்சு நூல்களும் முன்னும் பின்னும் கிழிந்து சிதைத்து போவதைக் காண்கின்ருேம். இவ்வாறே, பதிற்றுப் பத்தின் முதலும் கடையும் அழிந்துபோயின.