பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. இன்னிலை இன்னிலை என்னும் நூல் பொய்கையார் இயற்றிய நாற்பத்தைந்து வெண்பாக்களைக் கொண்டது. இதற்குப் பாரதம் பாடிய பெருந்தேவளுர் இயற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றும் உண்டு. 1915-இல் இந்த நூலைப் பதிப்பித்த வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள். இந்த நூலை மதுரை ஜாசிரியர் என்பவர் தொகுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இதைக் கொண்டு இந்நூலை ஒரு தொகைநூல் எனலாம். ஆளுல், இந்நூற் பாடல்கள் பலரால் பாடப் பட்டவை. யல்ல; பொய்கையார் என்னும் ஒருவராலேயே இயற்றப் பட்டவை - என்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில், இந்நூலை ஒரு தொகை நூல் என்பது எவ்வாறு? ஒருவேளை.- பொய்கையார் இயற்றிய பல உதிர்ப் பாடல்களிலிருந்து சிறந்தி நாற்பத்தைந்து நல்ல பாடல்களே மதுரையாசிரியர் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கலாம். மற்றும், பொய்கையார் பாடல்களுடன், பாரதம் பாடிய பெருந்தேவனரின் கடவுள் வாழ்த்துப் பாடலையும் மதுரை யாசிரியர் சேர்த்துத் தொகுத்ததால், அவர் இந்நூலின் தொகுப்பாசிரியர் எனப்பட்டார் போலும்? எப்படியோ, - இந்நூலுக்குத் தொகுப்பாசிரியர் என ஒருவர் ناكاة பட்டிருப்பதால், ஒருவகையில் இந்நூலையும் ஒரு தொக்ை நூல எனலாம். இந்நால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினைப் பற்றிக் கூறுவதாகும். - 2.': ', 49. ஆசாரக் கிேர்ணுவி பெருவாவின் முள்ளியார் இயந்திப் நீர் பாடல்களைக் கொண்ட ஆசாரக் கோவை ஒரு தொகை.நூல் அன்று: ஆயினும், கவின் பெயரில் உள்ள கோவை’ என்னும் சொல் கிறிது எண்ணத்தைக் கிளறுகிறது. தொகை நூ லக் கோவை கென்னும் சொல்லால் குறிக்கும். மரபுண்டு. எட்டுத் தொகை நூல்கள் எண் கோவை: என வழங்கப் பட்டிருப்பதும், அகநானுாற்றில்:"நித்திலக்கோவை' என ஒரு பிரிவு இருப்பதும், பிற்காலத் தொகை நூல்கள் சில: "கோவை’ என்னும் பெயரால் வழங்கப்படுவதும் ஈண்டு நினைவுகூரத் தக்கன. ஆனல், அக் கோவை, நூல்களைப்போல ஆசாரக் கோவை பலர் பாடிய பாடல்களின் கோவையாகிய தொகுப்பன்று. நல்லொழுக்கங்களைத் (ஆசாரங்களைத்) தொகுத்துக் கூறுவதால் இஃது ஆசாரக் கோவை எனப் பட்டது. எனவே, இந்த நூலைப் பலர் பாடிய பல உதிரிப் பாடல்களின் தொகுப்பாகக் கொள்ளாமல், பல நல்லொழுக் கங்களின் தொகுப்பு நூலாகக் கொள்ளவேண்டும். . பிற நூல்கள் "தொகை கிலேச் செய்யுள் தோன்றக் கூறின் ஒருவர் உரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும் பொருளிடம் காலம் தொழிலென நான்கினும் பாட்டினும் அளவினும் கூட்டிய வாகும்.' என்னும் தண்டியலங்காரப் பொது வணியியல் (5-ஆம்). நூற்பாவின் கீழ்ச் சுப்பிரமணிய தேசிகர் எழுதிய உரை யிடையே உள்ள, 'அவற்றுள், ஒருவரால் உரைக்கப்பட்டது திருவள்ளுவப் பயன் (திருக்குறள்); பலரால் உரைக்கப்பட்டது நெடுந் தொகை: இத்து எல்லாத் தொகைக்கும் பொதுவிலக்கணம். 26 بین ۰ - تا ۰ تا ده * " ي"هية، عربية ضي، منه ج: بی : . بشمه: :خشتی به . చi * :ు, ،تميتة. عينابيع عق . يكن يجين "هدية