பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

101


ஆயிரம் பொன்னுக்கு ஆனை வாங்கினாலும் அரைக் காசுக்குத் தான் சாட்டை வாங்க வேணும்.

ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை.

ஆயிரம் முடி போட்டாலும் ஆனைப் பலம் வருமா? 2330

ஆயிரம் ரூபாய் கொடுத்து ஆனை வாங்கி ஆறு காசு கொடுத்துச் சவுக்கு வாங்கவில்லை.

(பா-ம்.) அரைக்காசு.

ஆயிரம் ரூபாய் முதலில்லாமல் பத்து ரூபாய் நஷ்டம்.

ஆயிரம் வந்தாலும் அவசரம் ஆகாது.

ஆயிரம் வந்தாலும் ஆயத்தொழில் ஆகாது.

ஆயிரம் வந்தாலும் கோபம் ஆகாது. 2335

ஆயிரம் வருஷம் ஆனாலும் ஆனை மறக்குமா?

ஆயிரம் வருஷம் சென்று செத்தாலும் அநீதிச் சாவு ஆகாது.

ஆயிரம் வித்தை கற்றாலும் உலகத்தில் ஆடம்பரம் வேண்டும்.

ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.

(பா-ம்.) கண்டவன்.

ஆயில்யத்தில் மாமியார் ஆசந்தியிலே. 2340

ஆயுசுக்கும் வியாதிக்கும் சம்பந்தம் இல்லை.

ஆயுசு கெட்டியானால் ஒளடதம் பலிக்கும்.

ஆயுசு பூராவாக இருந்தால் மாந்தம் மயிரைப் பிடுங்குமா?

ஆயுதப் பரீக்ஷை அறிந்தவன் ஆயிரத்தில் ஒருவன்.

(பா-ம்.) நூற்றில்.

ஆயுதம் இல்லாரை அடிக்கிறதா? 2345

ஆயோதன முகத்தில் ஆயுதம் தேடுகிறது போல.

(ஆயோதனம்-யுத்தம்)

ஆர் அடா என் கோவிலிலே ஆண் நாற்றம், பெண் நாற்றம்?

ஆர் அடா விட்டது மான்யம்? நானே விட்டுக் கொண்டேன்.

ஆர் அற்றுப் போனாலும் நாள் ஆற்றும்.

ஆர் ஆக்கினாலும் சோறு ஆகவேணும். 2350

ஆர் ஆத்தாள் செத்தாலும் பொழுது விடிந்தால் தெரியும்.

ஆர் ஆர் என்பவர்கள் எல்லாம் தீக் குளிப்பார்களா?

ஆர் ஆருக்கு ஆளானேன், ஆகாத உடம்பையும் புண்ணாக்கிக் கொண்டு.