128
தமிழ்ப் பழமொழிகள்
ஆனைப் பசிக்குச் சோளப் பெரியா?
- (சோளப் பொரி தாங்குமா?)
ஆனைப் பாகன் மனைவி ஆறுமாசத்துக்கு விதவை.
ஆனைப் பாகன் வீட்டை ஆனைக்குக் காட்ட மாட்டான். 2970
ஆனைப் பாகனுக்கு ஆனையால் சாவு.
ஆனைப் பாகனும் குதிரைப் பாகனும் சவாரி செய்தாற் போல.
ஆனை பட்டால் கொம்பு; புலி பட்டால் தோல்.
ஆனை படுத்தால் ஆட்டுக்குட்டி உயரமாவது இருக்காதா?
ஆனை படுத்தால் ஆட்டுக்குட்டிக்குத் தாழுமா? 2975
ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
ஆனை படுத்தால் குதிரை உயரம் வராதா?
- (குதிரைப் பிரமாணம், குதிரை மட்டம்.)
ஆனை பழக்க ஆனை வேண்டும்.
ஆனை பாய்ந்தால் ஆர் பிடிப்பார்?
ஆனை பார்க்க வெள்வெழுத்தா? 2980
ஆனை பிடிக்கப் பூனைச் சேனை.
ஆனை பிடிப்பவனுக்குப் பூனை எம்மாத்திரம்?
ஆனை புக்க புலம் போல.
- (புறநானுாறு.)
ஆனை புகுந்த கரும்புத் தோட்டமும் அமீனா புகுந்த வீடும் உருப்படா.
ஆனை புலி வந்தாலும் தாண்டுவான். 2985
ஆனை பெரிது, ஆனாலும் அதன் கண் சிறிது.
ஆனை பெருத்தும் ஊனம் உதறாதே.
- (உதிராதே.)
ஆனை பெருமாளது; ஆர் என்ன சொன்னால் என்ன?
ஆனை போக அதன் வால் போகாதோ?
ஆனை போகிற வழியிலே எறும்பு தாரை விட்டது போல். 2990
ஆனை போய் ஆறு மாசம் ஆனாலும் தாரை மறையுமா?
ஆனை போல் ஐந்து பெண் இருந்தாலும் பூனை போல் ஒரு நாட்டுப் பெண் வேண்டும்.
- (ஆயிரம் பெண் இருந்தாலும்.)