தமிழ்ப் பழமொழிகள்
171
உண்ட வயிறு கேட்கும்; தின்ற பாக்குச் சிவக்கும்.
உண்டவன் உண்டு போக என் தலை பிண்டு போகிறது.
- (போகிறதா?)
உண்டவன் உரம் செய்வான். 3960
உண்டவன் பாய் தேடுவான்; உண்ணாதவன் இலை தேடுவான்.
உண்ட வீட்டிலே உட்காராமல் போனால் கண்டவர்கள் எல்லாம் கடுகடு என்பார்கள்.
உண்ட வீட்டிலே கிண்டி தூக்குவது போல.
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா?
- (இரண்டகம் நினைத்தல்.)
உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கிறவன் உண்டா? 3965
உண்டார் மேனி கண்டால் தெரியும்.
உண்டால் உடம்பு சொல்லும், விளைந்தால் வைக்கோற்போர் சொல்லும்.
உண்டால் கொல்லும் விஷம்.
உண்டால் கொல்லுமோ? கண்டால் கொல்லுமோ?
உண்டால் தின்றால் உறவு; கொண்டால் கொடுத்தால் உறவு. 3970
உண்டால் தின்றால் ஊரிலே காரியம் என்ன?
உண்டால் தீருமா பசி? கண்டால் தீருமா?
உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டும்.
உண்டான தெய்வங்கள் ஒதுங்கி நிற்கையில் சுற்றுப்பட்ட தெய்வம் ததியோதனத்துக்கு அழுததாம்.
உண்டான போது கோடானுகோடி. 3975
உண்டானால் உண்டு. உலகு அஸ்தமனமா?
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்.
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
உண்டு இருக்க மாட்டாமல் ஊர் வழியே போனானாம்; தின்று இருக்க மாட்டாமல் தேசாந்தரம் போனானாம்.
உண்டு உறியில் இரு என்றால் உருண்டு கீழே விழுந்தானாம். 3980
- (தரையில், தெருவில்.)
உண்டு என்ற பேருக்கு ஈசன் உண்டு; இல்லை என்ற பேருக்கு இல்லை.