தமிழ்ப் பழமொழிகள்
173
உண்ணாத தின்னாத ஊர் அம்பலம். 4005
உண்ணா நஞ்சு ஒருகாலும் கொல்லாது.
உண்ணாமல் ஊர் எல்லாம் திரியலாம்; உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகலாகாது.
உண்ணாமல் ஒன்பது வீடு போகலாம்; உடுக்காமல் ஒரு வீடும் போகலாகாது.
உண்ணாமல் கெட்டது உறவு; கேளாமல் கெட்டது கடன்.
உண்ணாமல் தின்னாமல் உறவின் முறையுாருக்கு ஈயாமல். 4010
உண்ணாமல் தின்னாமல் ஊர் அம்பலம் ஆனேனே!
- (ஓமல் ஆனேனே.)
உண்ணாமல் தின்னாமல் வயிறு உப்புசம் கொண்டேன்.
உண்ணி கடித்த நாய் உதறுவது போல.
உண்ணியைக் கண்டால் ஊரிள் பஞ்சம் தெரியும்.
- (உண்ணி-பையன், நாஞ்சில் நாட்டு வழக்கு.)
உண்ணுகிற சோறு வெல்லம். 4015
உண்ணுகிற வயிற்றை ஒளிக்கிறதா?
உண்ணுபவன் உண்டு விட்டுப் போனால் உன் தலைப்புண் விட்டுப்போகிறது.
உண்ணும் கீரையிலே நண்ணும் புல்லுருவி.
உண்ணுவார் இல்லை; உறங்குவார் இல்லை. ஒரு கட்டு வெற்றிலை தின்பார் இல்லை, சாந்து சந்தனம் பூசுவார் இல்லை. தலைக்குத் தப்பளம் போடுவார் இல்லை, வா மருமகளே வா
- (தவளை,)
உண்ணுவாளாம், தின்னுவாளாம் சீதா தேவி; உடன்கட்டை ஏறுவாளாம் பெருமா தேவி. 4020
- (தின்னுவாளாம் குந்தமாதேவி, ஏறுவாளாம் சீதா தேவி.)
உண்ணேன், உண்ணேன் என்றால் உடலைப் பார்த்தால் தெரியும்.
உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல்.
உண்பது நாழி; உடுப்பது நான்கு முழம்; எண்பது கோடி நினைந்து எண்ணும் மனம்.
உண்பன, தின்பன உறவுதான்; செத்தால் முழுக்குத்தாள்.
உண்பார் பாக்கியம், சம்பா விளையும். 4025
உண்பாரைப் பார்த்தாலும் உழுவாரைப் பார்த்தல் ஆகாது.