பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

205


ஊருக்கு ஒரு வழி; ஒன்றரைக் கண்ணனுக்கு ஒரு வழி. 4770

ஊருக்கு ஒருவன் துணை.

ஊருக்கு ஓமல்; வீட்டுக்கு வயிற்றெரிச்சல்.

ஊருக்குக் கடைசி உலகம்பட்டி.

(நகரத்தார் ஊர்களுக்குள் கடைசி.)

ஊருக்கு நாட்டான் பெண்டாட்டி என்றால் ஓ என்னுவாளாம்; ஓர் ஆளுக்குச் சோறு என்றால் ஹூம் என்னுவாளாம்.

ஊருக்குப் பால் வார்த்து உண்கிறாயா! உடம்புக்குப் பால் வார்த்து உண்கிறாயா? 4775

ஊருக்குப் பேரும் உறவின் முறைக்குப் பொல்லாப்பும்.

ஊருக்குப் போகிறவர் வேலை சொன்னால் ஓடி ஓடிச் செய்தாலும் தீராது.

ஊருக்கும் பேருக்கும் வடுகு இல்லை.

ஊருக்கு மாரடித்து ஒப்புக்குத் தாலி கட்டுகிறாளாம்.

ஊருக்கு முந்தி விளக்கு ஏற்றினால் உயர்ந்த குடியாக ஆகலாம். 4780

ஊருக்கு முன்னால் விளக்கு ஏற்றினால் ஒரு பிடி உயரும்.

ஊருக்கு விளைந்தால் ஓட்டுக்குப் பிச்சை.

ஊருக்கு வேலை செய்வதே மணியமாய் இருக்கிறான்.

ஊருக்குள் நடக்கிற விஷயம் யாருக்குத் தெரியும்? உள்ளே இருக்கிற குமரிக்குத் தெரியும்.

ஊருகிற அட்டைக்குக் கால் எத்தனை என்று அறிவான். 4785

ஊருடன் கூடி வாழ்.

(ஊரோடு ஒத்து வாழ்.)

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

ஊரூராய்ப் போகிறவனுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை.

ஊரே தாய்; வேலியே பயிர்.

ஊரை அடித்து உலையில் போடுகிறான். 4790

ஊரை ஆண்டாயோ? ஊரான் பெண்ணை ஆண்டாயோ?

ஊரை ஆள்கிற ராசாவுக்கு உட்கார இடம் இல்லையாம்!

ஊரை உழக்கால் அளக்கிறான்; நாட்டை நாழியால் அளக்கிறான்.

ஊரைக் கண்டவுடனே உடுக்கையைத் தோளில் போட்டுக் கொண்டானாம்.