பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

247


ஏன் என்று கேட்பாரும் இல்லை; எடுத்துக் கேட்பாரும் இல்லை.

(பார்ப்பாரும்.)

ஏன் கருடா சுகமா? இருக்கிற இடத்தில் இருந்தால எல்லாரும் சுகந்தான். 5735

(தண்டலையார் சதகம்.)

ஏன் காணும் தாதரே, ஆண்டி புகுந்தீர்? இரவும் ஒரு மண்டலம் பார்த்து விடுவோம்.

ஏன் கொழுக்கட்டை சவுக்கிட்டாய்? ஒருகாசு வெல்லம் இல்லாமல் சவுக்கிட்டேன்.

ஏன் கொழுக்கட்டை நட்டுக் கொண்டாய்? வெல்லம் இல்லாமல் பிட்டுக் கொண்டேன்.

ஏன் பறையா என்கிறதைவிட வள்ளுவப் பறையா என்கிறது மேல்.

ஏன வாயனைக் கண்டானாம்; ஏணிப் பந்தம் பிடித்தானாம். 5740

(கண்டாளாம்; பிடித்தாளாம்.)

ஏனானாம் கோத்திரத்துக்குத் தானானாம் தர்ப்பயாமி,

ஏனோ தானோ எவனோ செத்தான்.

ஏனோ தானோ என்றிருத்தல்.