30
தமிழ்ப் பழமொழிகள்
அத்தான் செத்தால் மயிர் ஆச்சு; கம்பளி மெத்தை நமக்கு ஆச்சு.
அத்தான் முட்டி, அம்மாஞ்சி உபாதானம், மேலகத்துப் பிராம்மணன் யாசகமென்று கேட்டானாம். 585
அத்திக்காய் தெரியுமா? வட்டைக்காய் தெரியுமா?
- (இடக்கர். )
அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தை.
அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் புழு.
- (அத்திக்காயை.)
அத்திப் பூவை ஆர் அறிவார்?
அத்திப் பூவைக் கண்டவர் உண்டா? ஆந்தைக் குஞ்சைப் பார்த்தவர் உண்டா? 590
அத்தி பூத்தது ஆரும் அறியார்?
அத்தி பூத்தாற் போல்
அத்தி மரத்தில் தொத்திய கிளி போல,
- (கனி போல.)
அத்தி முதல் எறும்பு வரை
- (அத்தி-யானை,)
அத்தியும் பூத்தது; ஆனை குட்டியும் போட்டது. 595
அத்திரி மாக்கு, ஆறு தாண்டுகிறேனா. இல்லையா, பார்.
அத்து மீறிப் போனான், பித்துக்குளியானான்.
அத்து மீறினால் பித்து.
அத்தை இல்லாப் பெண்ணுக்கு அருமை இல்லை; சொத்தை இல்லாப் பவழத்துக்கு மகிமை இல்லை.
அத்தை இல்லாப் பெண்டாட்டி வித்தாரி, மாமியில்லாப் பெண்டாட்டி வயிறுதாரி. 600
அத்தை இல்லாப் பெண் வித்தாரி; மாமி இல்லாப் பெண் மாசமர்த்தி,
அத்தை இல்லா வீடு சொத்தை.
அத்தை இறப்பாளா, மெத்தை காலி ஆகுமா என்று காத்திருப்பது போல,
அத்தைக்கு ஒழியப் பித்தைக்கு இல்லை; ஒளவையார் இட்ட சாபத்தீடு.
அத்தைக்குத் தாடி முளைத்தால் சிற்றப்பா என்னலாமா? 605
அத்தைக்குப் பித்தம்; அவருக்குக் கிறுகிறுப்பு.
அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா.
அத்தை கடன்காரி; அடி நாளைய சத்துரு,
அத்தைச் சொல்லடா சீமானே,