தமிழ்ப் பழமொழிகள்
31
அத்தைத்தான் சொல்வானேன்? வாயைத்தான் வலிப்பானேன்? 610
அத்தை பகையும் இல்லை; அம்மாமி உறவும் இல்லை.
அத்தை மகன், அம்மான் மகள் சொந்தம் போல,
அத்தைமகள் ஆனாலும் சும்மா வருவாளா?
- (கிடைப்பாளா?)
அத்தை மகளைச் கொள்ள முறை கேட்க வேண்டுமா?
அத்தையடி அத்தை, அங்காடி விற்குதடி, கண்மணியாளே நெல்லுமணி தருகிறேன். 615
அத்தையடி மாமி, கொத்துதடி கோழி.
அத்தையைக் கண்ட சகுனம் அத்தோடு போயிற்று.
அத்தை வீட்டு ரேழியில் கொண்டுவிட்டால்தான் கிழக்கு மேற்குத் தெரியும்.
அத்தோடு நின்றது அலைச்சல்; கொட்டோடே நின்றது குலைச்சல்.
அதமனுக்கு ஆயிரம் ஆயுசு. 620
அதர்மம் அழிந்திடும்.
- (செயங்கொண்டார் சதகம்.)
அதற்கும் இருப்பாள், இதற்கும் இருப்பாள், ஆக்கின சோற்றுக்குப் பங்கிற்கும் இருப்பாள்.
அதற்கு வந்த அபராதம் இதற்கும் வரட்டும்.
அதற்கெல்லாம் குறைவில்லை, ஆட்டடா பூசாரி,
அதன் கையை எடுத்து அதன் கண்ணிலே குத்துகிறது. 625
அதிக்கிரமமான ஊரிலே கொதிக்கிற மீன் சிரிக்கிறதாம்.
அதிக ஆசை அதிக நஷ்டம்.
அதிக ஆசை மிகு தரித்திரம்.
அதிகக் கரிசனம் ஆனாலும் அகமுடையானை அப்பா என்று அழைக்கிறதா?
அதிகச் சிநேகிதம் ஆபத்துக்கு இடம். 630
அதிகம் விளைந்தால் எண்ணெய் காணாது.
அதிகமாகக் குலைக்கும் நாய்க்கு ஆள் கட்டை.
அதிகமான பழக்கம் அவமரியாதையைத் தரும்.
அதிகாரம் இல்லாத சேவகமும் சம்பளம் இல்லாத உத்தியோகமும் எதற்கு?
அதிகாரம் இல்லாவிட்டாலும் பரிவாரம் வேண்டும். 635
அதிகாரிக்கு அடுப்புப் பயப்படுமா?
அதிகாரிக்கு முன்னும் கழுதைக்குப் பின்னும் போகக்கூடாது.
அதிகாரி குசு விட்டால் அமிர்த வஸ்து; தலையாரி குசு விட்டால் தலையை வெட்டு.