தமிழ்ப் பழமொழிகள்
167
கெட்டுக் கெட்டுக் குடி ஆகிறதா?
9400
கெட்டுப் போகிற காலம் வந்தால் சொட்டுப் புத்தி தேடுவானாம்.
- (நாள் வந்தால், சொட்டுப் புத்தி தோன்றும் தேறாது.)
கெட்டுப் போன பார்ப்பானுக்குச் செத்துப் பீயான பசுவைத் தானம் செய்தானாம்.
கெட்டும் பட்டணம் சேர்.
கெடுக்க நினைக்கின் அடுக்கக் கேடுறும்.
கெடுக்கினும் கல்வி கேடு படாது. 9405
- (கொடுக்கினும் )
கெடுங் காலத்துக்குக் கெட்டார் புத்தியைக் கேட்டார்.
கெடுங்குடி சொற் கேளாது.
கெடுத்தவருக்கும் கேடு நினையாதே.
கெடுப்பதும் வாய்; படிப்பதும் வாய்.
- (வாயால்.)
கெடுப்பாரைத் தெய்வம் கெடுக்கும். 9410
கெடுமதிக்குப் படுகுழியை வெட்டு.
கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.
கெடுவது செய்தால் படுவது கருமம்.
கெடுவாய், கேடு நினையாதே.
கெடுவார்க்குக் கெடுமதி பிடரியில். 9415
- (கெடுப்பார்க்கு.)
கெடுவான் கேடு நினைப்பான்.
கெண்டை பட்டாலும் பட்டது; கிடாரம் பட்டாலும் பட்டது.
கெண்டையைப் போட்டு வராலை இழுக்கிறதா?
- (இழுக்கிறது.)
கெதம் போனது கிருஷ்ணப்ரீதி.
கெருடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்டான். 9420
- (பல்டி என்பான்.)
கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கு அல்ல.
கெலியன் பாற்சோறு கண்டது போல.
- (கலியன்.)