பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கே


கேசம் உள்ள பெண் எப்படியும் கொண்டை கட்டுவாள்.

கேட்காமல் கொடுப்பது உத்தமம்; கேட்டுக் கொடுப்பது மத்திமம்; கேட்டும் கொடாமல் இருப்பது அதமம்.

கேட்டதை எல்லாம் நம்பாதே; நம்பினதை எல்லாம் சொல்லாதே. 9425


கேட்ட நாயைச் செருப்பால் அடி; சொன்ன நாயைச் சோட்டால் அடி.

கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.

கேட்டு ஊற்றுகிற கஞ்சியும் எடுத்து வைக்கிற பேனும் உரைக்கு வராது.

கேட்டுக்கு மூட்டை, கேடு காலத்துக்குச் சீலைப் பேன்.

கேட்டை நட்சத்திரம் ஏட்டனுக்கு ஆகாது. 9480

(ஏட்டன்-மூத்தவன்.)


கேட்டை நாலும் ஈட்டி போல.

கேட்டை, மூட்டை, செவ்வாய்க் கிழமை.

கேட்டையிலே பிறந்தால் கோட்டை கட்டி ஆள்வான்.

கேட்பார் சொல்லைக் கேட்டுக் கெடாதே.

கேட்பார் பேச்சைக் கேட்டு நாட்டான் வாய்க்கால் சாலையோடு போனானாம். 9435

(கும்பகோணத்துக்கும் காரைக்காலுக்கும் இடையில் உள்ள வாய்க்கால் வளைந்து வளைந்து செல்கிறது. )


கேட்பாரும் இல்லை; மேய்ப்பாரும் இல்லை.

கேடகத்தையும் பெருமாளையும் கீழாறு கொண்டு போகச்சே கூட வந்த அநுமாருக்குத் தெப்பத் திருநாளாம்.

கேடது இல்லான் பாடது இல்லான்.

(கேடு, பாடு.)

கேடு காலத்தில் ஓடு கப்பரை.

கேடு கெட்ட நாயே, வீடு விட்டுப் போயேன். 9440