தமிழ்ப் பழமொழிகள்
169
கேடு வரும் பின்னே; மதி கெட்டு வரும் முன்னே.
கேடு வரும்போது மதி கெட்டு வரும்.
கேதம் கேட்க வந்தவள் தாலி அறுப்பாளா?
- (செட்டி நாட்டு வழக்கு.)
கேதுவைப் போல் கெடுத்தவனும் இல்லை; ராகுவைப் போல் கொடுத்தவனும் இல்லை.
கேரளம் வானராசாரம்; கூகூ சப்தம் நிரந்தரம். 9445
கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்றால் கேட்போருக்கு மதி எங்கே போச்சு?
- (நெய் ஓடுகிறது என்றால்.)
கேழ்வரகு மாவில் நெய் ஒழுகுகிறது என்று சொல்கிறவர் சொன்னாலும் கேட்கிறவர்களுக்கு மதி இல்லையா?
கேள் அற்றவருக்கு வேள்.
கேள்வி உடைமை, கீர்த்தியே கல்வி.
கேள்வி கேளாமல் தலையை வெட்டுகிறதா? 9450
கேள்விச் செவியன் ஊரைக் கெடுப்பான்.
கேள்விப் பேச்சில் பாதிதான் நிற்கும்.
கேள்விப் பேச்சு ஊரைச் சுடும்.
கேள்வி முயல்.
கேளாச் செவிக்கு மூளா நெருப்பு. 9455
கேளாத கடன் பாழ்.
கேளாமல் கெட்டது கடன்; நடவாமல் கெட்டது உறவு.
கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை.