172
தமிழ்ப் பழமொழிகள்
கைபிடித்து இழுத்தும் அறியாதவன் சைகை அறிவானா?
கை போடாத புருஷன் இல்லை; விரல் போடாத பெண் இல்லை.
கைம்பெண்டாட்டி எருமையிலே கறவை பழகினாற் போல. 9505
கைம்பெண்டாட்டிக்கு ஒருத்தன் ஆனால் கட்டுக் கழுத்திக்கு எட்டுப் பேர்.
கைம்பெண்டாடிக்கும் காளவாய்க்கும் எங்கே என்று காத்திருக்கும்.
கைம்பெண்டாட்டி தாலியைக் கூழைக் கையன் அறுத்தானாம்.
கைம்பெண்டாட்டி பெற்ற பிள்ளை ஆனாலும் செய்யும் சடங்கு சீராய்ச் செய்ய வேண்டும்.
- (பெண் ஆனாலும்.)
கைம்பெண்டாட்டி வளர்த்த கழுக்காணி. 9510
கைம்பெண் பிள்ளை ஆனாலும் செய்கிற சடங்கு செய்.
கைம்பெண் வளர்த்த கழிசடை.
- (கழி சிறை.)
கைம்மேல் கண்ட பலன்.
கையது சிந்தினால் அள்ளலாம்;வாயது சிந்தினால் அள்ளமுடியாது.
கையால் ஆகாத சுப்பி. திருவாரூர்த் திப்பி. 9515
கையால் ஆகாத சிறுக்கி வர்ணப் புடைவைக்கு ஆசைப்பட்டாளாம்.
கையால் ஆகாததற்கு வாய் பெரிது.
கையால் ஆகாதவனுக்குக் கரம்பிலே பங்கு உழாதவனுக்கு ஊரிலே பங்கு.
கையால் கிழிக்கும் பனங் கிழங்குக்கு ஆப்பும் வல்லிட்டுக் குற்றியும் ஏன்?
கையால் கிள்ளி எறியும் வேலைக்குக் கனத்த கோடரி வேண்டுமோ? 9520
கையால் பிடிக்கப் பொய்யாய்ப் போச்சுது.
கையாலே தொட்டது கரி.
கையாளாத ஆயுதம் துருப் பிடிக்கும்.
கையாளுகிற இரும்பு பளபளக்கும்.
கையானைக் கொண்டு காட்டானையை பிடிக்க வேண்டும். 9525
கையில் அகப்பட்ட துட்டுக் கணக்குப் பேசுகிறது.
- (பேசும்.)
கையில் அகப்பட்ட பொருளுக்கும் கணக்கு.
கையில் அரிசியும் கமண்டலத்தில் தண்ணீரும்.