பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தமிழ்ப் பழமொழிகள்


கையில் காசும் இல்லை; முகத்தில் பொலிவும் இல்லை.

கையில் காசு, வாயில் தோசை.

கையில் கிடைத்த அமுதைச் சமரில் ஊற்றலாமா? 9550


கையில் குடையும் காலில் சோடும் வேண்டும்.

கையில் கெளுத்தி மீனை வைத்துக்கொண்டு ஆணத்திற்குக் கத்தரிக்காயைத் தேடி அலைந்தாளாம்.

கையில் சாவு, வாயில் கோல்.

கையில் தாழ்வடம், மனசிலே கரவடம்.

கையில் பணம் இருக்கிறதா என்றால், பணம் இருந்த கை இருக்கிறது என்றானாம். 9555


கையில் பறவையை விட்டுக் காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்கலாமா?

கையில் பிடப்பது துளசி மாலை; கட்கத்தில் இடுக்குவது கன்னக்கோல்,

(ஜபமாலை.)

கையில் பிள்ளையோடு கடலில் விழுந்தாள்.

கையில் மஞ்சள் ஆனால் காரியம் மஞ்சூர்தான்.

கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அழுவானேன்? 9560


கையில் ஜபமணி கொண்டு மிரட்ட வருகிறாயே!

கையில் ஜபமாலை; கட்கத்தில் கன்னக் கோல்.

கையிலே காசு; வாயிலே தோசை.

கையும் இல்லை; காலும் இல்லை; திம் தடாக்கா.

கையும் கணக்கும் சரி. 9565


கையும் களவுமாய்க் கண்டு பிடிக்கிறது.

கையெழுத்துப் போடத் தெரிந்தால் கடனுக்குத்தான் வழி.

கையை அறுத்து விட்டாலும் அகப்பையைக் கட்டிக் கொண்டு திருடுவான்.

கையை உடைத்து விட்டவன் தலையை உடைத்தாலும் உடைப்பான்.

கையை ஊன்றித்தான் கரணம் போட வேண்டும், 9570