பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

181


கொடுக்கிறேன் என்றால் ஆசை, அடிக்கிறேன் என்றால் பயம்.

கொடுக்கினும் கல்வி கேடு படாது.

கொடுங்கோல் அரசு நெடுநாள் நில்லாது. 9695


கொடுங்கோல் கீழ்க் குடியிருத்தல் ஆகாது.

கொடுங்கோல் மன்னன் நாட்டிலும் கடும்புலி வாழும் காடு நன்று.

கொடுத்த கடன் கேட்டால் குமரகன்ட வலிப்பு வலிக்கிறதாம்.

கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை.

கொடுத்ததுபோல வாங்கிக் கொள்ளும். 9700


கொடுத்ததைக் கொடுக்கும் குறளிப் பிசாசு.

(குட்டிச்சாத்தான்.)

கொடுத்த பணம் செல்லா விட்டால் கூத்தரிசிக்காரி என்ன செய்வாள்?

கொடுத்தவருக்கு எல்லாம் உண்டு; கொடாதவருக்கு ஒன்றும் இல்லை.

கொடுத்தவரைப் புகழ்வார்; கொடாதவரை இகழ்வார்.

கொடுத்தவன் அப்பன்; கொடாதவன் சுப்பன். 9705


கொடுத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.

கொடுத்தால் ஒரு பேச்சு; கொடாமற் போனால் ஒரு பேச்சு.

கொடுத்தால் ஒன்று; கொடுக்கா விட்டால் ஒன்று.

கொடுத்தால் குறை வராது.

(வருமா?)

கொடுத்தால்தான் சாமி, கொண்டு வந்தால்தான் மாமி. 9710


கொடுத்தாலும் ஒன்று; கொடா விட்டாலும் ஒன்று.

கொடுத்தாற் போல் கொடுத்து வாங்கிக் கொள்ளுகிறது.

கொடுத்து உறவு கொள்; கோளன் என்று இரேல்.

கொடுத்து ஏழை ஆயினார் இல்லை.

(பழமொழி நானூறு.)

கொடுத்துக் கெட்டார் ஆரும் இல்லை. 9715


கொடுத்துக் கொடுத்து இரு கையும் கூழையாய்ப் போயின.

(கூழாய்.)

கொடுத்துக் கொடுத்துக் கையும் காய்ப்பு ஏறிப் போயிற்று.

கொடுத்து நிஷ்டூரப் படுவதைவிடக் கொடுக்காமல் நிஷ்டூரப்படுவதே மேல்.