198
தமிழ்ப் பழமொழிகள்
கோழி திருடியவன் தலையில் கொண்டை மயிர்.
கோழி தின்ற கள்ளனும் கூட நின்று குலாவுகிறான்.
கோழி போனது அல்லாமல் குரலும் போயிற்று. 10090
கோழி மிதித்துக் குஞ்சு சாவது இல்லை.
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
- (குஞ்சுக்குக் கேடு ஆகுமா?)
கோழி முட்டைக்குச் சுருக்கு வைத்து, வாத்து முட்டைக்கு வரிச்சல் போடுவான்.
கோழி முட்டைக்குத் தலையும் இல்லை; கோவில் ஆண்டிக்கு முறையும் இல்லை.
கோழி முட்டைக்கு மயிர் பிடுங்குகிறான். 10095
கோழி முடத்துக்குக் கடாவெட்டிக் காவு கொடுக்கிறதா?
- (கடா வெட்டிப் பலி இட்டது போல.)
கோழி மேய்த்தாலும் கும்பினியான் கோழி மேய்க்க வேணும்.
- (கோறன்மேத்திலே. Government.)
கோழியின் காலில் கச்சையைக் கட்டினாலும் குப்பையைத்தான் சீக்கும்
- (கிளறும்.)
கோழியும் கொடுத்துக் குலையும் இழந்தாளாம்.
(கூக்குரலும் படுகிறதா?)
கோழியும் யாருடையதோ? புழுங்கலும் யாருடையதோ? 10100
- (யாழ்ப்பாண வழக்கு.)
கோழியை அடிப்பதற்குக் குறுந்தடி ஏன்?
கோழியைக் கேட்டா ஆணம் காய்ச்சுகிறது?
கோழியைக் கேட்டுத்தான் மிளகாய் அரைப்பார்களா?
கோழியைப் பருந்து அடிக்கும்; பருந்தைப் பைரி அடிக்கும்.
- (பைரி-ராஜாளி.)
கோழியையும் கொடுத்துக் குரலையும் இழந்தாளாம். 10105
கோழியை வளர்க்கப் பிடித்தாலும் கேர் கேர் என்னும்; கழுத்தை அறுக்கப் பிடித்தாலும் கேர் கேர் என்னும்.
கோழை நாய்க்குப் பட்டது அரிது.
கோழையில் மொய்த்துக் குழம்பும் ஈயைப் போல்.
கோழையும் ஏழையும் கூடின காரியம் பாழிலே பாழ்.
கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என்று நினை. 10110