தமிழ்ப் பழமொழிகள்
45
கண்ட மங்கலத்து அஞ்சு பெண்களும் ஒருத்தர் போன வழி ஒருத்தர் போகார். 6685
கண்ட மாப்பிள்ளையை நம்பிக் கொண்ட மாப்பிள்ளையைக் கைவிட்டாற் போல.
கண்டர மாணிக்கத்துக் கட்டுத் தறியும் வேதம் சொல்லும்.
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்.
கண்டவன் எடுக்கானா?
கண்டவன் எடுத்தால் கொடுப்பானா? 6690
கண்டவன் கொள்ளையும் கணியாகுளப் போரும்.
- (கணியாகுளம் குமரிமாவட்டம்; 1635 நாயக்கர் படைதங்கிப் போரிட்டது.)
கண்டவன் விலை சொன்னால் கொண்டவன் கோடி உடான்.
- (யாழ்ப்பாண வழக்கு.)
கண்டார் கண்டபடி பேசுகிறது.
- (பேசுகிறார்கள்.)
கண்டாரைக் கேட்டாரைச் சொல்லாதே. கண்டால் அல்லவோ பேசுவார் தொண்டைமான்? 6695
கண்டால் ஆயம்; காணா விட்டால் மாயம்.
- (ஆயம்-வரி.)
கண்டால் ஒரு பேச்சு; காணா விட்டால் ஒரு பேச்சு.
கண்டால் ஒன்று; கானா விட்டால் ஒன்று.
கண்டால் கரிச்சிருக்கும்; காணா விட்டால் இனித்திருக்கும்.
கண்டால் காமாட்சி நாயக்கர்; காணா விட்டால் காமாட்டி நாயக்கன். 6700
- (கவரை வடுகன். காணா விட்டால் மீனாச்சி நாயக்கன்.)
கண்டால் காயம்; காணாவிடில் மாயம்.
கண்டால் சரக்கறியேன்; காணாமல் குருக்கறியேன்.
கண்டால் கீச்சுக் கீச்சு; காணா விட்டால் பேச்சுப் பேச்சு.
- (கிளி.)