பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

53


கத்தரித் தோட்டக்காரனுக்குக் கண் தெரியாது; வெள்ளரித் தோட்டக்காரனுக்குக் காது கேளாது.

கத்தரித் தோட்டத்துக் களை பிடுங்கினாற் போலும் இருக்க வேண்டும்; கன்றுக் குட்டிக்குப் புல் பிடுங்கினாற் போலும் இருக்க வேண்டும். 6850


கத்தி இருக்கும் இடத்துக்கு மரை காவுகிறதா?

கத்தி எட்டின மட்டும் வெட்டும்; பணம் எட்டாத மட்டும் வெட்டும்.

(பாயும்; பணம் பாதாளம் மட்டும் பாயும்.)

கத்தி கட்டி பெண்சாதி எப்போதும் கைம்பெண்டாட்டி.

கத்தி கூர் மழுங்கத் தீட்டுகையில் அது இரட்டைக் கூர் பட்டது போல.

கத்திப் பிடிக்குப் பிடித்தால் அரிவாள் பிடிக்கு ஆகட்டும். 6855


கத்தியும் கடாவும் போல.

கத்தியும் வெண்ணெயும் காய்ச்சித் துவைத்துக் கடை.

கத்தியைப் பார்க்கிலும் கனகோபம் கொலை செய்யும்.

கத்து, கத்து என்றால் கழுதையும் கத்தாது;

சொல் சொல் என்றால் புலவனும் சொல்லான்.

(பாடு பாடு என்றால் பாடான்.)

கத்துகிற மட்டும் கத்திவிட்டுப் போகச்சே கதவைச் சாத்திக்கொண்டு போ. 6860


கதலீனாம் முதலீனாம் பலகாலே வக்ர கதி.

கதவின் கீழே நின்று கொண்டு காலைக் காலைக் காட்டினாளாம்.

கதவைச் சாத்தினால் நிலை புறம்பு.

கதி இருவர் கன்னித் தமிழுக்கு.

(கதிகம்பரும் திருவள்ளுவரும்.)

கதி கெட்ட மாப்பிள்ளைக்கு எரு முட்டை பணியாரம், 6865

(கணவனுக்கு.)


கதிர் களைந்தும் களை எடு.

கதிர் நூல் குறைந்தாலும் கள்ளச்சி கழுத்து நூல் குறையாது.

கதிர் போல இளைத்துக் குதிர் போல் பெருப்பது

கதிர் முகத்தில் என்ன ராசி முழக்கம் வேணும்?

கதிர்வன் சிலரைக் காயேன் என்னுமோ? 6870

(கபிலர் அகவல். )