பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

133




நாயின் மலத்தை மிதிப்பானேன்? நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவானேன்? 14245


நாயின் முதுகில் அம்பாரியைக் கட்டினது போல.

நாயின்மேல் ஏறி வையாளி விட்டால் என்ன? விழுந்தால் என்ன?

நாயின் வாயில் கோலைக் கொடுக்கிறதா?

நாயின் வாயில் சிக்கிய எலியைப் போல.

நாயின் வாலைக் குணக்கு எடுக்கலாமா? 14250


நாயின் வாலைப் பன்னீராண்டு குழலில் இட்டாலும் எடுக்கும்போது வளைந்துதானே இருக்கும்?

நாயின் விசுவாசம் பூனைக்கு வருமா?

நாயின் வீரம் தன் வீட்டு வரையில்தான்.

நாயினும் கடையேன்.

நாயும் எறும்பும் போல. 14255


நாயும் கரிச் சட்டியும் போல.

(களிச் சட்டியும்.)

நாயும் காகமும் போலச் சண்டை போடாதே.

நாயும் சரி, நாவியும் சரி உனக்கு.

நாயும் தன் நிலத்துக்கு ராஜா.

நாயும் தீண்டாத உணவு; புலையனும் தீண்டாத யாக்கை. 14260


நாயும் நரியும் ஊளையிட.

நாயும் நரியும் ஒன்றாகுமா?

( நன்றாகுமா?)

நாயும் நரியும் போல.

நாயும் நாயும் போல.

நாயும் பசுப்பட்டு மோரும் விலை போகிறபோது பார்க்கலாம்.{{float_right|14265} }

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு.

(பாரதியார்.)

நாயும் பூனையும் அடித்துக் கொண்டது போல.

நாயும் பூனையும் போல.

நாயும் பேயும் பிள்ளை ஆகுமா?

நாயும் வர உறியும் அறுந்தவன் சீலம். 14270


நாயும் வயிறு வளர்க்கும் நடு ஜாமத்திலே.

நாயும் வளர்த்து நரகலையும் வாருவானேன்?