பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

137


நாரையைப் பார்க்க நரியே தேவலாம், ஊரைப் பார்த்து ஊ ளை இட.

நால்வர் கூடினால் தேவர் சபை.

(தேவர் வாக்கு.)

நால்வர் வாக்குத் தேவர் வாக்கு.

(வேதவாக்கு.)

நால்வரோ தேவரோ?

நாலடி இரண்டடி கற்றவனிடம் வாயடி கையடி அடிக்காதே. 14355

(நாலடி-நாலடியார், இரண்டடி-குறள்.)


நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்.

நாலாம் பாதம் நாழி பிடித்து உட்காரும்; எட்டாம் மாதம் எடுத்து அடி வைக்க வேணும்.

(குழந்தை.)

நாலாம் பிறை பார்த்தால் நாய் அலைச்சலாய்த்தான் முடியும்.

நாலாம் பேற்றுப் பெண் நாதாங்கியை விற்று உண்ணும்.

நாலாவது பெண், நாதாங்கி முளைக்கும் திக்கு இல்லை. 14360

(பெண் பிறந்தால் நாதாங்கியும் கிடையாது.)


நாலு அடி அடித்துப் போர்மேல் போட்டாயிற்று.

நாலு ஆறு கூடினால் பாலாறு.

(நாலாறு-கெளண்டின்ய ஆறு, அகஹரம் பெண்ணையாறு; செய்யாறு, கிளியாறு.)

நாலு கரண்டி நல்லெண்ணெய்; நாற்பத்தாறு தீவட்டி; வாரார் ஐயா சுப்பையா; வழிவிடடி மீனாட்சி.

நாலு காரை கூடினால் ஒரு பழுதை.

நாலு கால் சோமாரியும் ஒரு காலிலே இறங்கினாற் போல. 14365

(இரண்டு காலிலே.)


நாலு காலிலே நரி கள்ளன்; இரண்டு காலிலே இடையன் கள்ளன்.

நாலு செத்தை கூடினது, ஒரு கத்தை.

நாலு தடவை தப்பினவனுக்கு நமன் பயம் ஏது?

நாலு தலைமுறைக்கு முன் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்.

நாலு பறையனடி, நானூறு பள்ளனடி; ஆள் இல்லாப் பாவமல்லோ ஆளேற்றம் கொள்கிறான்? 14370

(-நானூறு பள்ளிகளின் ஓலம்.)


நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவிலே சோறு; ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியிலே சோறு.