தமிழ்ப் பழமொழிகள்
137
நாரையைப் பார்க்க நரியே தேவலாம், ஊரைப் பார்த்து ஊ ளை இட.
நால்வர் கூடினால் தேவர் சபை.
- (தேவர் வாக்கு.)
நால்வர் வாக்குத் தேவர் வாக்கு.
- (வேதவாக்கு.)
நால்வரோ தேவரோ?
நாலடி இரண்டடி கற்றவனிடம் வாயடி கையடி அடிக்காதே. 14355
- (நாலடி-நாலடியார், இரண்டடி-குறள்.)
நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்.
நாலாம் பாதம் நாழி பிடித்து உட்காரும்; எட்டாம் மாதம் எடுத்து அடி வைக்க வேணும்.
- (குழந்தை.)
நாலாம் பிறை பார்த்தால் நாய் அலைச்சலாய்த்தான் முடியும்.
நாலாம் பேற்றுப் பெண் நாதாங்கியை விற்று உண்ணும்.
நாலாவது பெண், நாதாங்கி முளைக்கும் திக்கு இல்லை. 14360
- (பெண் பிறந்தால் நாதாங்கியும் கிடையாது.)
நாலு அடி அடித்துப் போர்மேல் போட்டாயிற்று.
நாலு ஆறு கூடினால் பாலாறு.
- (நாலாறு-கெளண்டின்ய ஆறு, அகஹரம் பெண்ணையாறு; செய்யாறு, கிளியாறு.)
நாலு கரண்டி நல்லெண்ணெய்; நாற்பத்தாறு தீவட்டி; வாரார் ஐயா சுப்பையா; வழிவிடடி மீனாட்சி.
நாலு காரை கூடினால் ஒரு பழுதை.
நாலு கால் சோமாரியும் ஒரு காலிலே இறங்கினாற் போல. 14365
- (இரண்டு காலிலே.)
நாலு காலிலே நரி கள்ளன்; இரண்டு காலிலே இடையன் கள்ளன்.
நாலு செத்தை கூடினது, ஒரு கத்தை.
நாலு தடவை தப்பினவனுக்கு நமன் பயம் ஏது?
நாலு தலைமுறைக்கு முன் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்.
நாலு பறையனடி, நானூறு பள்ளனடி; ஆள் இல்லாப் பாவமல்லோ ஆளேற்றம் கொள்கிறான்? 14370
- (-நானூறு பள்ளிகளின் ஓலம்.)
நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவிலே சோறு; ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியிலே சோறு.