பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தமிழ்ப் பழமொழிகள்




நான் கெட்டாலும் எதிரி வாழ வேண்டும்.

நான் கொக்கோ? கொங்கு நாட்டானே.

நான் சாப்பிட்டது சாப்பாடு அல்ல; மலம்.

நான் செத்த நாளும் இல்லை; நீ அழுத நாளும் இல்லை.

நான் செத்து ஏழு பிறப்புப் பிறந்தாலும் அவன் செய்த நன்கொடையை மறக்க மாட்டேன். 14475

(நன்றியை.)


நான் செய்கிறதற்கு நீதான் ஆர்?

நான் செருப்பு விடுகிற இடத்தில்கூட அவன் நிற்க யோக்கியன் அல்ல.

நான் தேடிப் பிச்சை போட, நாரிகள் எல்லாம் வந்தார்கள் தெய்வம் ஆட.

நான் நட்டேன்; நாதன் பயிர் ஆக்கினான்.

நான் நீட்டின விரலை மடக்க மாட்டேன்; நீட்டி நீட்டிப் பேசுவேன். 14480


நான் நோகாமல் அடிக்கிறேன்; நீ ஓயாமல் அழு.

நான் நோகாமல் அடித்தேன்; நீ ஓயாமல் அழுதாய்; அவன் போகாமல் வந்தான்.

நான் பட்ட பாடு நாய்கூடப் படாது.

நான் படும் பாடு பஞ்சுதான் படுமோ?

(அருட்பா.)

நான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்கிறதா? 14485


நான் பெண் பிறந்து தெருவிலே நிற்கிறேன்.

நான் பெற்றால் என்ன? என் அண்ணன் பெற்றால் என்ன?

நான் போனால் சண்டை வரும்; எங்கள் அக்காள் போனால் மயிரைப் பிடித்து இழுத்து வருவாள்.

நான் போனால் மோட்சம் போகலாம்.

(நான்-அகங்காரம்.)

நான் வந்தேன் நாற்றமும் போச்சு. 14490


நான் வருகிறேன் பெண்ணுக்கு இருக்க; என் அம்மாள் வருகிறாள் பிள்ளையை எடுக்க.

(பெண்ணைக் காத்திருக்க.)

நான் வாழ்ந்த வாழ்வைக் சொல்லுகிறேன்; அண்டை வீட்டுக்காரன் இருக்கிறானா? பார்.