பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

147


நின்று போட்டதும் இல்லை; குனிந்து எடுத்ததும் இல்லை.

நினைக்க முத்தி அண்ணாமலை. 14580


நினைக்கும் முன் வருவான்; நினைப்பதும் தருவான்.

நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும்.

நினைத்ததும் கறி சமைத்ததும்.

நினைத்த நேரம் நெடு மழை பெய்யும்.

நினைத்த போது பிள்ளை பிறக்குமா? 14585


நினைத்துக் கொண்டாளாம் கிழவி, வயசுப் பிள்ளைக்கு வாழ்க்கைப்பட.

(மாலையிட.)

நினைப்பின் வழியது உரை.

நினைப்பு எல்லாம் பிறப்பு.

நினைப்புக் குடியைக் கெடுத்ததாம்; நேர்வானம் பிட்டத்தைக் கெடுத்ததாம்.

நினைப்புப் பிழைப்பைக் கெடுத்தது; நீர்த்த தண்ணீர் உப்பைக் கெடுத்தது. 14590


நினைவே கனவு.

நிஜமாகத் தூங்குகிறவனை எழுப்பலாம், பொய்யாகத் தூங்குகிறவனை எழுப்ப முடியாது.

நிஜாம் அலி தண்டில் நிஜார்க்காரனைக் கண்டாயா?

(கண்டதுண்டா?)

நிஷ்டூரன் கண்ணைத் தெய்வம் கெடுக்கும்; நீதிமான் கண்ணைப் பரிதானம் கெடுக்கும்.