தமிழ்ப் பழமொழிகள்
147
நின்று போட்டதும் இல்லை; குனிந்து எடுத்ததும் இல்லை.
நினைக்க முத்தி அண்ணாமலை. 14580
நினைக்கும் முன் வருவான்; நினைப்பதும் தருவான்.
நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும்.
நினைத்ததும் கறி சமைத்ததும்.
நினைத்த நேரம் நெடு மழை பெய்யும்.
நினைத்த போது பிள்ளை பிறக்குமா? 14585
நினைத்துக் கொண்டாளாம் கிழவி, வயசுப் பிள்ளைக்கு வாழ்க்கைப்பட.
- (மாலையிட.)
நினைப்பின் வழியது உரை.
நினைப்பு எல்லாம் பிறப்பு.
நினைப்புக் குடியைக் கெடுத்ததாம்; நேர்வானம் பிட்டத்தைக் கெடுத்ததாம்.
நினைப்புப் பிழைப்பைக் கெடுத்தது; நீர்த்த தண்ணீர் உப்பைக் கெடுத்தது. 14590
நினைவே கனவு.
நிஜமாகத் தூங்குகிறவனை எழுப்பலாம், பொய்யாகத் தூங்குகிறவனை எழுப்ப முடியாது.
நிஜாம் அலி தண்டில் நிஜார்க்காரனைக் கண்டாயா?
- (கண்டதுண்டா?)
நிஷ்டூரன் கண்ணைத் தெய்வம் கெடுக்கும்; நீதிமான் கண்ணைப் பரிதானம் கெடுக்கும்.