பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தமிழ்ப் பழமொழிகள்



நீ


நீ அவல் கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன்; ஊதி ஊதித் தின்னலாம். 14595


நீ அறையில் ஆட்டினாய்; நான் அம்பலத்தில் ஆட்டினேன்.

நீ இருக்கிற அழகுக்கா திருட வந்தாய்?

நீ இழு, நான் இழு, மோருக்கு வந்த மொட்டச்சி இழு.

நீ உளறாதே; நான் குழறுகிறேன்.

நீக்குப் போக்குத் தெரியாமல் நேர்ந்தபடி. 14600


நீ கஜகர்ணம் போட்டாலும் நடக்காது.

நீ கூத்திக்கு வாழ்க்கைப்பட்டுக் குடியிருப்பு வீடு, செப்பனிட்டாலும் நான் வாத்திக்கு வாழ்க்கைப்பட்ட வயிற்றெரிச்சல் தீராது.

நீ கோபம் மா லாபம்.

(-உன் கோபம் என் லாபம். தெலுங்கு.)

நீச்சம் அறியாதவரை வெள்ளம் கொண்டு போகும்.

நீச்சக் கடலிலே நெட்டி மிதிக்கிறது போல. 14605


நீச்சத் தண்ணீருக்குக் கெஞ்சினவன் பசும்பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.

நீச்சு நிலை இல்லாத ஆற்றிலே நின்று எப்படி முழுகுகிறது?

நீசர் ஆனவர் நிலைபெறக் கல்லார்.

நீசனை நீசன் நோக்கில் ஈசன் ஆவான்.

(ஜோதிடம்.)

நீ செத்தால் உலகம் எல்லாம் எறும்பாய்ப் போகுமா? 14610


நீ செய்த நன்றிக்கு நான் நன்றியாப் பெற்றுப் பேர் இட வேணும்.

நீ சொம்மு நா சொம்மே, நா சொம்மு நீ சொம்மே.

(உன் சொத்து என் சொத்தே; என் சொத்து உன் சொத்தே. தெலுங்கு.)

நீ சொல்கிறது நிஜம் ஆனால் நாக்கினால் மூக்கைத் தொடு.

நீட்டவும் மாட்டார்; முடக்கவும் மாட்டார்.

(மடக்கவும்.)

நீட்டிச் சுருக்கின் மூண்டது நெடும்பகை. 14615

(நீட்டிக் குறுக்கினால்.)