பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

155



நூற்றெட்டு அடிக் கம்பத்திலே ஆடினாலும் பூமியில் வந்துதான் தானம் வாங்க வேண்டும்.

நூற்றைக் கெடுத்ததாம் குறுணி, 14745


நூறு ஆண்டு ஆயினும் கல்வியை நோக்கு.

நூறு குற்றம், ஆறு பிழை கொண்டு பொறுக்க வேண்டும்.

நூறு நாள் ஓறி ஆறு நாள் விடத் தீரும்.

நூறு பலம் மூளையை விட ஒரு பலம் இதயம் உயர்ந்தது.

நூறு பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் மருத்துவம் பார்க்கப் போனாளாம். 14750


நூறு வயசுக் கிழவன். ஆனாலும் நுழைந்து பார்க்க ஆசை.

நூறோடு நூற்றொன்று.

நூறோடு நூறு ஆகிறது; நெய்யிலே சுட்ட பணியாரம்.