பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

179



படித்துக் கெட்டவன் இராவணன்; படிக்காமல் கெட்டவன் துரியோதனன்.

படிதாண்டாப் பத்தினி. 15305


படிப்படியாகத்தான் ஏற வேண்டும்.

படித்தது ராமாயாணம்; இடிப்பது பெருமாள் கோவில்.

படிப்பது திருவாசகம்; இடிப்பது சிவன் கோயில்.

(படிப்பது வேதம்.)

படிப்பது வேதம்; அறுப்பது தாலி.

படிப்புக்கும் பதவிக்கும் சம்பந்தம் இல்லை. 15310


படுக்கப் படுக்கப் பாயும் பகை,

படுக்கப் பாயும் கொடான், நிற்க நிழலும் கொடான்.

(தூங்க இடமும் கொடான்.)

படுக்கைச் சுகம் மெத்தை அறியாது.

(அறியுமோ?)

படுக்கை உள்ளுக்கும் பட்சணம் வேணும்.

படுகளத்தில் ஒப்பாரியா? 15315


படுகளப்பட்ட பன்னாடை.

படுகுழி வெட்டினவன் அதிலே விழுவான்.

படுத்தால் பசி பாயோடே போய் விடும்.

படுத்திருப்பவன் எழுவதற்குள்ளே நின்றவன் நெடுந்துாரம் போவான்.

படுதீப் பட்டு வேகிற வீட்டில் படுத்துக் கொள்ள இடம் கேட்டானாம். 15320


படுவது பட்டும் பட்டத்துக்கு இருக்க வேண்டும்.

படைக் களத்திலே ஒப்பாரி இடுகிறதா?

படைக்காமல் படைத்தானாம்; காடு மேடு எல்லாம் இழுத்து அடித்தானாம்.

படைக்கு ஒருவன்; கொடைக்கு ஒருவன்.

(படைக்கும் கொடைக்கும்.)

படைக்கு ஓடி வாழ்; பஞ்சத்துக்கு இருந்து வாழ், 15325

(ஓடிப் பிழை.)


படைக்குப் பயந்து செடிக்குள் ஒளிகிறதா?

படைக்குப் போகாதவர் நல்ல வீரர்.

படை கெட்டு ஓடுகையில் நரைமயிர் பிடுங்குகிறதா?