180
தமிழ்ப் பழமொழிகள்
படைச்சாலுக்கு ஒரு பணம் இருந்தாலும் பயிர் இல்லாதவன் பாவி.
படைச்சாலுக்கு ஒரு பணம் கொடுத்தாலும் பயிரிடும் குடிக்குச் சரி ஆமா? 15330
படைத்த உடைமையைப் பாராமல் போனால் பாழ்.
படைத்தவன் காக்க வேண்டு.
படை பண்ணியும் பாழும் கோட்டை.
- (பாழாம்.)
படை மிருந்தால் அரண் இருக்கும்.
- (இல்லை.)
படை முகத்தில் ஒப்பாரியா? 15335
படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
படையாது படைத்த மருமகளே. உன்னைப் பறையன் அறுக்கக் கனாக் கண்டேன்.
- (மாமியாரே.)
படையிலும் ஒருவன்; கொடையிலும் ஒருவன்.
பண்டம் ஓரிடம்; பழி ஓரிடம்.
பண்டம் ஓரிடம்; பழி பத்திடம். 15340
பண்டாரத்துக்கும் நாய்க்கும் பகை.
பண்டாரம் என்றால் இலை போடும் ஆளா?
பண்டாரம் கூழுக்கு அழச்சே, லிங்கம் பரமான்னத்துக்கு அழுத கதை.
பண்டாரம் கூழுக்கு முன்றானையா?
பண்டாரம் படபடத்தால் பானைசட்டி லொடலொடக்கும். 15345
- (பண்டாரம் பட் என்ன, லொடலொட என்று உடையாதா? குடு குடு என்ன.)
பண்டாரம் பழத்துக்கு அழும்போது பிள்ளை பஞ்சாமிர்தத்துக்கு அழுததாம்.
பண்டாரம் பிண்டத்துக்கு அழுகிறான்; லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறது.
பண்டாரம் பிண்டத்துக்கு அழுதானாம்; லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டதாம்.
பண்டாரமே, குருக்களே, பறைச்சி மூத்திரம் குடித்தவரே!
பண்டித வம்சம். 15350
பண்டிதன் பிள்ளை சும்பன்.
பண்டை பட்ட பாட்டைப் பழங்கிடுகில் போட்டுவிட்டுச் சம்பா நெற்குத்திப் பொங்கல் இடுகிறாள்.