தமிழ்ப் பழமொழிகள்
189
பரதேசிக்குச் சுடு சோறு பஞ்சமா?
பரதேசியின் நாய்க்குப் பிறந்த ஊர் நினைவு வந்தது போல. 15545
பரப்பான் பயிர் இழந்தான்; இரப்பான் சுகம் இழந்தான்.
பரப்பிரமத்தை தியானம் செய்வதனால் பிரகாசிக்காமல் இருந்த விஞ்ஞானமும் பிரகாசிக்கிறது.
பரபரப்பிலே பாழும் சுடலை ஆச்சு.
பரபோகம் தேடி, இக போகம் நாடி, வாழ்க்கை பெற வேண்டும்.
பரம்பரை ஆண்டியோ? பஞ்சத்துக்கு ஆண்டியோ? 15550
பரிக்கு இடும் கடிவாளத்தை நரிக்கு இடுகிறது.
பரிகாசப்பட்டவனைப் பாம்பு கடித்தாற்போல.
பரிகாரி உறவு தெருவாசல் மட்டும்.
பரிகாரி கடை கொள்ளப் போன கதை.
பரிகாரி தலைமாட்டிலிருத்து அழும் தன்மை போல. 15555
பரிசத்துக்கு அஞ்சிக் குருட்டுக் கன்னியைக் கொண்டது போல.
பரிசத்துக்கு லோபி இழிகண்ணியைக் கொண்டானாம்.
- (பரிசத்துக்குப் பால் மாறி.)
பரிசு அழிந்தாரோடு தேவரும் ஆற்றிலர்.
- (பழமொழி நானூறு.)
பரிந்த இடம் பாழ்.
பரிந்து இட்ட சோறு பாம்பாய்ப் பிடுங்குகிறது. 15560
பரிந்து இடாத சோறும் சொரிந்து தேய்க்காத எண்ணெயும் பாழ்.
பரிவு இல்லாப் போசனத்தில் பட்டினி நன்று; பிரியம் இல்லாப் பெண்டிரிற் பேய் நன்று.
பருத்தவள் சிறுப்பதற்குள் சிறுத்தவள் செத்துப் போவாள்.
பருத்தி உழுமுன்னே தம்பிக்கு எட்டு முழம்.
பருத்திக் கடையிலே நாய்க்கு அலுவல் என்ன? 15565
- (என்ன வேலை?)
பருத்திக் காடு உழுகிறதற்கு முன்னே பொம்மனுக்கு ஏழு முழம் திம்மனுக்கு ஏழு முழம்.
பருத்திக் கொட்டை பழம் புளி.
- (-உபயோகம் அற்றவை.)
பருத்திச் செடி புடைவையாய்க் காய்த்தது போல.
பருத்திச் செடியும் பாலும் உள்ளானுக்குப் பஞ்சம் இல்லை.
பருத்திப் பொதிக்கு ஒரு நெருப்புப் பொறி போல. 15570