192
தமிழ்ப் பழமொழிகள்
பல் விழுந்த புடையனுக்குக் கிருதா.
15625
பல உமி தின்றால் ஓர் அவல் தட்டாதா?
- (ஓர் அவிழ் தட்டும்.)
பல எலி கூடினால் புற்று எடுக்காது.
- (யாழ்ப்பாண வழக்கு.)
பல கரும்பிலும் ஒரு கைவெட்டு.
பலசரக்குக் கடைக்காரனுக்குப் பைத்தியம் பிடித்தது போல.
பலத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு. 15630
பலத்தவனுக்கு மருத்து சொன்னால் பிடுங்கிக் கொடுத்துத் தீர வேண்டும்.
பல தீட்டுக்கு ஒரு முழுக்கு.
பல துளி ஆறாய்ப் பெருகும்.
பல துளி பெரு வெள்ளம்.
பல தொல்லைக்காரன். 15635
பல நாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
பல நாளை வெயில் ஒறுத்தாலும் ஒரு நாளை மழை ஒறுக்காதே.
பல பாளம் தீர ஒரு புண்ணியமாகிலும் பண்ண வேண்டும்.
பல பிச்சை ஆறாய்ப் பெருகும்.
பல பீற்றல் உடையான் ஒரு பீற்றல் அடையான். 15640
பலம் தேயப் போய்ப் பழி வந்து சேர்ந்தது போல.
- (பலன்.)
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
பல மரம் கண்டவன் ஒரு மரமும் ஏறப் போவதில்லை.
பல முயற்சி செய்யினும் பகவான்மேல் சிந்தைவை.
பலர் கண் பட்டால் பாம்பும் சாகும். 15645
பல வாய்க்கால் ஆறாய்ப் பெருகும்.
பல வீட்டு உறவு முறை பட்டினி,
பல வீட்டுப் பிச்சை ஒரு வீட்டுச் சோறு.
பலவும் தின்றால் ஓர் அவல் தட்டாதா?
பலன் இல்லாப் பல நாளிலும் அறம் செய்த ஒரு நாள் பெரிது. 15650
பலன் தேடப் போய்ப் பழி வந்து நேர்த்தது போல,
பலா உத்தமம்; மா மத்திமம்; பாதிரி அதமம்.