பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

221



பிடிக்குப் பிடி நமஸ்காரம்.

(செங்கற்பட்டு வைஷ்ணவ வழக்கு.)

பிடித்த காரியம் கடித்த வாய் துடைத்தாற் போல் வரும். 16315


பிடித்த கிளையும் மிதித்த கொம்பும் முறிந்து போயின.

பிடித்த கொம்பு ஒடிந்து மிதித்த கொம்பும் முறிந்தாற் போல ஆனேன்.

(ஒடிந்து போக.)

பிடித்த கொம்பும் விட்டேன்; மிதித்த கொம்பும் விட்டேன்,

பிடித்த கொம்பை விடாதே.

பிடித்ததன் கீழே அறுத்துக் கொண்டு போகிறது. 16320


பிடித்த துன்பத்தைக் கரைத்துக் குடிக்கலாம்,

பிடித்தவர்க்கு எல்லாம் பெண்டு.

(+ஆவாள்.)

பிடித்தால் கற்றை; விட்டால் கூளம்.

பிடித்தால் குரங்குப் பிடி பிடிக்க வேண்டும்; அடித்தால் பேயடி அடிக்க வேண்டும்.

பிடித்தால் சுமை; விட்டால் கூளம். 16325


பிடித்தால் பானை, விட்டால் ஓடு.

பிடித்தால் புளியங்கொம்பைப் பிடிக்க வேணும்.

(புளியாங்கிளையை.)

பிடித்தால் பெரிய கொம்பைப் பிடிக்க வேணும்.

பிடித்தாலும் பிடித்தாய், புளியங்கொம்பை.

பிடித்து ஒரு பிடியும், கிழித்து ஒரு கிழியும் கொடுத்தது உண்டா? 16330


பிடித்துத் தின்றதைக் கரைத்துக் குடிக்கலாம்.

பிடித்து வைத்தால் பிள்ளையார்; வழிந்து எறிந்தால் சாணி மொத்தை.

(சவட்டித் தேய்த்தால்.)

பிடி பிடியாய் நட்டால் பொதி பொதியாய் விளையுமா?

பிடி யானையைக் கொண்டு களிற்று யானையை வசப்படுத்துவது போல.

பிடியில் அழகு புகுந்தால் வபன் அழகு ஆவாள். 16335


பிடிவாதம் குடி நாசம்.

(குல நாசம்.)

பிடி விதை விளையும்; மடி விதை தீயும்.