பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தமிழ்ப் பழமொழிகள்


தடி பிடிக்கக் கை இல்லை; அவன் பெயர் செளரியப் பெருமாள்.

தடி மழை விட்டும் செடி மழை நிற்கவில்லை.

தடிமனும் தலையிடியும் தன் தனக்கு வந்தால் தெரியும். 11870

(தடிமன்-ஜலதோஷம். யாழ்ப்பாண வழக்கு.)


தடியங்காய் திருடினவன் தோளைத் தடவிப் பார்த்துக் கொண்டானாம்.

தடுக்கில் பிள்ளை தடுக்கிலேயா?

(யாழ்ப்பாண வழக்கு.)

தடுக்கின் கீழே நுழைந்ததால், கோலத்தின் கீழே நுழைகிறான்.

(நுழைகிறது.)

தடுங்கித் தள்ளிப் பேச்சுப் பேசுகிறது.

தடுக்கு விழுந்தால் தங்கப் போகிணி; எகிறி விழுந்தால் இருப்புச் சட்டி. 11875


தடுக்கி விழுந்தால் பிடிக்குப் பாதி.

தடும் புடும் பயம் நாஸ்தி; நிஸப்தம் ப்ராண சங்கடம்.

தடைக்கு அஞ்சாத பாம்பு.

தண்ட சோற்றுக்காரன் குண்டு போட்டால் வருவான்.

(தண்ட சோற்று ராமா, குண்டு போட்டு வாடா.)

தண்ட சோற்றுத் தடிராமன். 11880


தண்ட சோற்று ராமா, குண்டு போட்டு வாடா.

தண்டத்துக்கு அகப்படும்; பிண்டத்துக்கு அகப்படாது.

தண்டத்துக்குப் பணமும்திவசத்துக்குக்கறியும் அகப்படும்.

(காசும் வந்துவிடும்.)

தண்டத்துக்குப் பணமும் திவசத்துக்குக் காசும் அகப்படும்.

(காசும் வந்துவிடும்.)

தண்டத்துக்குப் பெற்றுப் பிண்டத்துக்கு வளர்த்தேன். 11885


தண்டத்துக்கு வந்தான் பண்டாரவாடையான்.

தண்டரிந்த முக்கு; தலைக்கு இரண்டு அமுக்கு.

தண்டிகை ஏறப் பணம் இருக்கிறது; தலையில் கூடத் துணி இல்லை.

(கட்ட.)

தண்டில் போனால் இரட்டிப்புச் சம்பளம்.

தண்டிலே போனால் இரண்டிலே ஒன்று. 11890

(தண்டு-படை.)