தமிழ்ப் பழமொழிகள்
37
தண்டுக்கு ரொட்டி சுட்டுப் போடுகிறவன்.
தண்டு முண்டுக்காரனுக்குத் தயிறும் சோறும்; அடிபிடிக்காரனுக்கு ஆனமும் சோறும்.
தண்டு முண்டுக்காரனுக்குத் தயிறும் சோறும்; விசுவாசக்காரனுக்கு வெந்நீர்க் சோறு.
தண்டை இட அத்தை இல்லாவிட்டாலும் சண்டை இட அத்தை உண்டு.
தண்ணீர் இல்லாத வேளாண்மையும் தான் உழாத நிலமும் தரிசு. 11895
தண்ணீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
தண்ணீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?
தண்ணீர்க்குடம் உடைந்து தவியாய்த் தவிக்கையிலே கோவணத்தை அவிழ்த்துக் கொண்டு குதியாய்க் குதிக்கிறாயே!
தண்ணீர் கண்டாயா? பால் கண்டாயா?
- (பார்.)
தண்ணீர்க்குடம் உடைந்தாலும் ஐயோ! தயிர்க்குடம் உடைந்தாலும் ஐயோ! 11900
தண்ணீர் காட்டினான்.
தண்ணீர் கிடக்கும் நாக்குத் தலை கீழாய்ப் புரளும்.
தண்ணீர் குடித்த வயிறும் தென்னோலை இட்ட காதும் சரி.
தண்ணீர் தகராறு, பிள்ளை பதினாறு.
தண்ணீர் தவளை குடித்ததும் குடியாததும், யார் அறிவார்? 11905
தண்ணீர் பட்ட பாடு.
தண்ணீர் மிஞ்சினால் உப்பு; உப்பு மிஞ்சினால் தண்ணீர்.
தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அவிக்கும்.
தண்ணீரில் இருக்கிற தவளை குடித்ததைக் கண்டதார்? குடியாததைக் கண்டதார்?
தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்கிறான். 11910
தண்ணீரில் இறந்தவரிலும் சாராயத்தில் இறந்தவர் அதிகம்.
தண்ணீரில் உள்ள தவளை தண்ணீர் குடித்ததோ, இல்லையோ?
தண்ணீரில் மூச்சு விட்டால் தலைக்கு மேலே.
தண்ணீரில் விழுந்தவர்களுக்கும் தடுமாறி நிற்பவர்களுக்கும் ஆனைப்பலம் வந்து விடும்.
தண்ணீரிலே தடம் பிடிப்பான். 11915