பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தமிழ்ப் பழமொழிகள்


தண்ணீரிலே போட்டாலும் நனையாது; கரையில் போட்டாலும் காயாது.

தண்ணீரிலேயே தன் பலம் காட்டுகிறது.

தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.

(வளர்ந்த உப்பு.)

தண்ணீருக்குள் கிடைக்கும் தவளை தண்ணீரைக் குடித்ததும் குடிக்காததும் யாருக்குத் தெரியும்?

தண்ணீரின் கீழே மூச்சுவிட்டால் தலைக்கு மேலே. 11920

(குசு விட்டால்.)


தண்ணீருக்குள் குசுவினாலும் தலைக்கு மேலே வந்துவிடும்.

தண்ணீரும் கோபமும் தாழ்ந்த இடத்திலே.

தண்ணீரும் தாமரையும் போல.

தண்ணீரும் பாசியும் கலந்தாற் போல.

தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும். 11925


தண்ணீரைத் தடிகொண்டு அடித்தாலும் தண்ணீரும் தண்ணீரும் விலகுமா?

தண்ணீரையும் தாயையும் பழிக்கலாமா?

தணிந்த வில்லுத்தான் தைக்கும்.

தத்திக் குதித்துத் தலைகீழே விழுகிறது.

தத்தி விழுந்தால் தரையும் பொறுக்காது. 11930


தத்துவம் அறிந்தவன் தவசி.

தந்தவன் இல்லை என்றால் வந்தவன் வழியைப் பார்க்கிறான்.

(வந்தவன் வந்த வழியை பார்க்க வேண்டும்.)

தந்தனம் பாடுகிறான்.

தந்தானா என்பது பாட்டுக்கு அடையாளம்.

தந்தால் ஒன்று; தராவிட்டால் ஒன்று. 11935


தந்தி தாழ்ப்பாள் தச்சப் பையன் கூத்தியார்.

தந்திரத்தால் தேங்காய் உடைக்கலாமா?

தந்திரம் படைத்தவன் தரணி முழுவதையும் ஆள்வான்.

தந்திரம் பெரிதா? மந்திரம் பெரிதா?

தந்தை எவ்வழி, தனையன் அவ்வழி. 11940

(புதல்வன்.)


தந்தைக்குத் தலைப் பிள்ளை, தாய்க்குக் கடைப் பிள்ளை.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.