தமிழ்ப் பழமொழிகள்
45
தலையும் நனைத்துக் கட்டியும் நாட்டின பிறகா?
தலையைச் சுற்றிப் பிடிக்கிறான்.
தலையைச் சுற்றியும் வாயாலே.
தலையைச் சுற்றுகிற மாடும் கூரையைப் பிடுங்கித் தின்கிற மாடும் குடும்பத்துக்கு ஆகா.
தலையைத் தடவி மூளையை உரிய வேண்டாம். 12095
- (உறிஞ்ச வேண்டாம். உறிஞ்சுவான்.)
தலையைத் திருகி உரலில் போட்டு இடிக்கச்சே, சங்குசக்கரம் கடுக்கள் உடைந்து போகப் போகிறது என்றானாம்.
தலையும் நனைத்தாச்சு; கத்தியும் வைத்தாச்சு.
தலையை வெட்டிச் சமுத்திரத்தின்மேற் போடலாமா?
தலைவலிக்குத் தலை அணையைத் தானே மாற்றிப் போட்டாற் போல.
தலைவலி போகத் திருகுவலி வந்தது. 12100
- (திரு வலி.)
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
தலைவலியும் பசியும் தனக்கு வந்தால் தெரியும்.
- (தலையிடியும்.)
தலைவன் சொற் கேள்.
- (+நன்னெறி தவறேல்.)
தலைவன் நிற்கத் தண்டு நிற்கும்.
- (தண்டு-சேனை.)
தலைவன் மயங்கச் சர்வமும் மயங்கும். 12105
தவசிக்குத் தயிரும் சாதமும் விசுவாசிக்கு வெந்நீரும் பருக்கையும்.
தவசிப்பிள்ளை நமசிவாயம் கையாசாரம்.
தவசுக்கு என்று வந்து அச்சப்படுகிறதா?
தவசுக்குத் தனிமையும் தமிழுக்குத் துணையும்.
தவசே அணிகலன்; தாழ்மையே மேன்மை. 12110
தவத்தில் இருந்தால் தலைவனைக் காணலாம்.
தவத்து அளவே ஆடுமாம் தான் பெற்ற செல்வம்.
தவத்துக்கு ஒருவர்; கல்விக்கு இருவர்; வழிக்கு மூவர்.
தவத்துக்கு ஒருவர்; தமிழுக்கு இருவர்.
- (கல்விக்கு.)
தவத்தோர் மனம் அழுங்கச் செய்யக் கூடாது. 12115
- (மனம் முறிய.)