பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

45


தலையும் நனைத்துக் கட்டியும் நாட்டின பிறகா?

தலையைச் சுற்றிப் பிடிக்கிறான்.

தலையைச் சுற்றியும் வாயாலே.

தலையைச் சுற்றுகிற மாடும் கூரையைப் பிடுங்கித் தின்கிற மாடும் குடும்பத்துக்கு ஆகா.

தலையைத் தடவி மூளையை உரிய வேண்டாம். 12095

(உறிஞ்ச வேண்டாம். உறிஞ்சுவான்.)


தலையைத் திருகி உரலில் போட்டு இடிக்கச்சே, சங்குசக்கரம் கடுக்கள் உடைந்து போகப் போகிறது என்றானாம்.

தலையும் நனைத்தாச்சு; கத்தியும் வைத்தாச்சு.

தலையை வெட்டிச் சமுத்திரத்தின்மேற் போடலாமா?

தலைவலிக்குத் தலை அணையைத் தானே மாற்றிப் போட்டாற் போல.

தலைவலி போகத் திருகுவலி வந்தது. 12100

(திரு வலி.)


தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.

தலைவலியும் பசியும் தனக்கு வந்தால் தெரியும்.

(தலையிடியும்.)

தலைவன் சொற் கேள்.

(+நன்னெறி தவறேல்.)

தலைவன் நிற்கத் தண்டு நிற்கும்.

(தண்டு-சேனை.)

தலைவன் மயங்கச் சர்வமும் மயங்கும். 12105


தவசிக்குத் தயிரும் சாதமும் விசுவாசிக்கு வெந்நீரும் பருக்கையும்.

தவசிப்பிள்ளை நமசிவாயம் கையாசாரம்.

தவசுக்கு என்று வந்து அச்சப்படுகிறதா?

தவசுக்குத் தனிமையும் தமிழுக்குத் துணையும்.

தவசே அணிகலன்; தாழ்மையே மேன்மை. 12110


தவத்தில் இருந்தால் தலைவனைக் காணலாம்.

தவத்து அளவே ஆடுமாம் தான் பெற்ற செல்வம்.

தவத்துக்கு ஒருவர்; கல்விக்கு இருவர்; வழிக்கு மூவர்.

தவத்துக்கு ஒருவர்; தமிழுக்கு இருவர்.

(கல்விக்கு.)

தவத்தோர் மனம் அழுங்கச் செய்யக் கூடாது. 12115

(மனம் முறிய.)