6
தமிழ்ப் பழமொழிகள்
செக்குமாட்டைக் கவலையிலே கட்டினாற் போல.
செக்குமாடு போல் உழைக்கிறான்.
செக்கை நக்குகிற தம்பிரானே, தண்டம், நீ தென்புறம் நக்கு;நான் உட்புறம் நக்குகிறேன்.
செக்கை வளைய வரும் எருதுகளைப் போல்.
செக்கை விழுங்கிவிட்டுச் சுக்குத் தண்ணீர் குடித்தாற் போல. 11230
செங்கதிர் முன்னே வெண்கதிர் அடங்கினது போல.
செங்கோல் அரசனே தெய்வம் ஆவான்.
செங்கோல் ஓங்குபவன் திரித்துவத் தேவன்.
செங்கோல் கோணினால் எங்கும் கோணும்.
செங்கோலுக்கு முன் சங்கீதமா? 11235
செஞ்சி அழிந்தது; சென்னை வளர்ந்தது.
- (சென்னப் பட்டணம் தோன்றியது.)
செட்டிக்கு இறுத்துப் பைக்கும் இறுத்தேன்.
- (+ துலுக்கச்சிக்கு எதற்கு உருக்கு மணி!)
செட்டிக்கு உறக்கம் உண்டு; வட்டிக்கு உறக்கம் இல்லை.
செட்டிக்கு எதற்குச் செம்புச் சனியன்?
செட்டிக்கு ஏன் சென்மச் சனியன்? 11240
செட்டிக்கு ஒரு சந்தை; திருடனுக்கு ஓர் அமாவாசை.
செட்டிக்கு ஒரு தட்டு; சேவகனுக்கு ஒரு வெட்டு.
செட்டிக்குத் தெற்குச் செம்புச் சனியன்.
செட்டிக்கும் பயிருக்கும் சென்மப் பகை.
செட்டிக்கும் மட்டிக்கும் சென்மப் பகை. 11245
செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை.
செட்டி கப்பலுக்குச் செந்தூரான் துணை.
- (காப்பு.)
செட்டிகள் மாடு மலை ஏறி மேயுமா?
செட்டி கூடிக் கெட்டான்; சேணியன் பிரிந்து கெட்டான்.
செட்டி கெட்டால் பட்டு உடுத்துவான். 11250
- (கெட்டும். உடுப்பான்.)
செட்டி கொடுத்துக் கெட்டான்.
செட்டி சிதம்பரம்,
செட்டி சுற்றாமல் கெட்டான்; தட்டான் தட்டாமல் கெட்டான்.
செட்டி நீட்டம் குடி தலையிலே.
செட்டி நட்டம் தட்டானில்; தட்டான் நட்டம் ஊர்மேலே. 11255
- (யாழ்ப்பாண வழக்கு.)