பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87


தெ


தெட்டிப் பறிப்பாரை எட்டிடத்தில் பறிக்கிறது. 13115

(எத்தில் பறக்கிறது.)


தெந்தினப் பாட்டுப் பாடித் திருநாமம் இட வந்தான்.

தெய்வ அருள் இருந்தால் செத்தவனும் பிழைப்பான்.

தெய்வத்துக்குச் சத்தியம்; மருந்துக்குப் பத்தியம்.

தெய்வத்துக்குச் செய்வதும் செய்க்கு உரம் போடுவதும் வீண் அல்ல.

தெய்வத்தை இகழ்ந்தவர் செல்வத்தை இழந்தார். 13120


தெய்வப் புலவனுக்கு நா உணரும்; சித்திர ஓடாவிக்குக் கை உணரும்.

(சித்திரக்காரனுக்கு.)

தெய்வ பலமே பலம்.

தெய்வம் இட்டபடி நடக்கிறது.

தெய்வம் இட்டு விடாமல் வீணர் படியிட்டு விடிவதுண்டோ.

தெய்வம் இல்லாமலா பொழுது போகிறதும் பொழுது விடிகிறதும்? 13125


தெய்வம் உண்டு என்பார்க்கு உண்டு; இல்லை என்பார்க்கு இல்லை.

தெய்வம் காட்டும்; எடுத்து ஊட்டுமா?

தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

தெய்வம் கெடுக்காத குடியைத் தெலுங்கன் கெடுப்பான்.

தெய்வம் கைகூட்டி வைத்தது. 13130


தெய்வம் சீறின் கைதவம் ஆகும்.

தெய்வம் துணைக் கொள்; தேகம் அநித்தியம்.

(தெய்வம் பேணி.)

தெய்வம் படி அளக்கும்.

தெய்வம் பண்ணின திருக்கூத்து.

தெய்வமே துணை. 13135