பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தமிழ்ப் பழமொழிகள்



தெய்வ வணக்கம் நரக வாசலை அடைக்கும் தாழ்.

தெரிந்தவர்கள் தென்னம் பிள்ளை வைப்பார்கள்.

தெரிந்தவன் என்று கும்பிடு போட்டால் உன் அப்பன் பட்ட கடனை வைத்துவிட்டுப் போ என்றானாம்.

தெரிந்தவனுக்குத்தான் தெரியும் செம்மறியாட்டு முட்டை,

தெரியாத் துணையே, பிரியாத் துணை நீ. 13140

(தெரியாத துணையே.. பிரியாத துணை..)


தெருச் சண்டைக்கு இடுப்புக் கட்டல்.

(கட்டுகிறதா?)

தெருச்சண்டை கண்ணுக்கு இன்பம்.

(குளிர்ச்சி.)

தெருவில் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே.

தெருவிலே ஊர்வலம் போகிறதென்று திண்ணையில் தூங்குபவன் திணறிக்கொண்டு செத்தானாம்.

தெருவிலே போகிற சனியனை விலை கொடுத்து வாங்கினது போல. 13145


தெருவிலே போகிறவனை அண்ணை என்பானேன்? ஆத்தைக்கு இரண்டு கேட்பானேன்.

(இலங்கை வழக்கு.)

தெருவோடு போகிற சண்டையை வீட்டு வரைக்கும் வந்து போ என்றது போல.

தெருவோடு போகிற வண்டியைக் காலில் இழுத்துவிட்டுக் கொண்டது போல.

தெருளா மனசுக்கு இருளே இல்லை.

தெலுங்கச்சி சுவர்க்கம் போனாற் போல. 13150

(தாமதம்.)


தெவிட்டாக் கனி பிள்ளை; தெவிட்டாப் பானம் தண்ணீர்.

தெள்ளிய திருமணி, திருட்டுக்கு நவமணி.

தெள்ளுப் பிடித்த நாயைப் போல.

தெளிந்த தண்ணீர் நீர் குடித்தீர்; சேற்றைக் கலக்கி விட்டீர்.

தெளிவு கூறும் பரதேவ தேசிகன். 13155


நெற்கத்திக் குருவியை வடக்கத்திக்குருவி தெற்றி அழைத்ததாம்;சீசம் பழம் தின்னம் போக.

தெற்கு விழுந்த கருக்கலும் தேவடியாளிடம் போன காசும் திரும்பா.