பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

தமிழ்ப் பழமொழிகள்


வடுக வில்லங்கமாய் வந்து வாய்த்தது.

வடுகன் தமிழறியான்; வைக்கோலைக் கசு என்பான். 19510


வடுகனும் தமிழனும் கூட்டுப் பயிர் இட்ட கதை.

வடுகு கொழுத்தால் வறையோட்டுக்கும் ஆகாது.

வடுகு பொடுகாச்சு; வைக்கோற் போர் நெல் ஆச்சு.

வடையைத் தினைச் சொன்னார்களா, துளையை எண்ணச் சொன்னார்களா?

வண்டப் பயலுக்கு ஏற்ற கண்டிப் பெண்சாதி. 19515

(கண்டப் பெண் சாதி.)


வண்டி அலங்காரமாம்; வலத்து மாடு சிங்காரமாம்.

வண்டிக்காரன், மாவுத்தன், ராவுத்தன், பனையேறி இவர்களுக்குப் பதவியில்

ஏறியதும் அகங்காரம் வரும்.

வண்டிப் பாரம் பூமியிலே.

வண்டியில் ஓடம் ஏறும்; ஓடத்தில் வண்டி ஏறும்.

வண்டி வருகிறது; ராட்டினத்தை விலக்கு. 19520


வண்ணான் கெடுத்தது பாதி; வாதி கெடுத்தது பாதி.

(வண்ணான் பண்ணினது பாதி; வாதம் பண்ணினது பாதி.)

வண்ணான் கையில் சேலையைப் போட்டுக் கொக்கின் பின்னே போகிறதா?

(புடைவையைப் போட்டு.)

வண்ணான் சித்து வழியிலே.

வண்ணான் சொல் கேட்டு வீண்பழிக்கு ஆள் ஆனானே!

வண்ணான் துறைக் கல்லிலே வந்த பேர் எல்லாம் துவைக்கலாம். 19525


வண்ணான் தோய்க்கத் தண்ணீர் பாய்ச்சினால் கல்யாணத்துக்குக் காய்

பறிக்கலாம்.
(அவரைக்காய்.)

வண்ணான் பர்மாக்காரியிடம் கொசுவலைக்குக் கூலி கேட்ட மாதிரி.

(-அதிகமாகக் கேட்பான்.)

வண்ணான் பிள்ளை செத்தால் அம்பட்டனுக்கு மயிர் போயிற்று,

வண்ணான் பெண்ணுக்கு அம்பட்டன் துடுப்புக் கொடுத்தது போல.

(துரும்பு)

வண்ணான் பொதி ஏத்துகிற வேளை. 19530