பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

121


வயிற்றிலே பாலை வார்த்தாற்போல.

வயிற்றிலே பிறந்தால் என்ன, விலாவிலே பிறந்தால் என்ன?

வயிற்றில் புளியைக் கரைக்கிறது. 19625


வயிற்றிலே வாழையை வைப்பான்.

வயிற்று அகமுடையான், கயிற்று அகமுடையான்,

வயிற்று எரிச்சல்.

வயிற்று எரிச்சல் பெண்சாதிக்கு மாலைக்கண் அகமுடையான்.

வயிற்று எரிச்சலைச் சொல்கிறேன்; வாடி புழைக்கடைக்கு என்றாளாம். 19630


வயிற்றுக்குச் சோறும் இடுப்புக்குத் துணியும்.

(+ இல்லை வயிற்றுக்குக் தண்ணீீரும்.)

வயிற்றுக் குடல் வாயில் வரக் குட்டுகிறதா?

வயிற்றுக் குடலைக் காட்டினாலும் வாழைநார் என்கிறான்.

வயிற்றுச் சோற்றுக்காக வைத்தீசுவரன் கோயில் மட்டும் நடப்பான்.

வயிற்றுப் பாம்புக்குக் கடுகும் வளைப் பாம்புக்கு வெந்நீரும் இடு. 19635


வயிற்றுப் பிள்ளை நழுவும்படி பேசுகிறான்.

வயிற்றுப் பிள்ளையை நம்பிக் கைப்பிள்ளையைக் கைவிட்டது போல.

(கைபிள்ளையை ஆற்றில் நழுவி விட்டது போல, பறி கொடுத்தது போல, இழத்தது போல.)

வயிற்றுப் பிள்ளையை நம்பி மாடு மேய்க்கிற பிள்ளையைப் பறி கொடுத்தாற் போல.

(மாடு மேய்க்கிற பிள்ளையைக் காலை வாரி விட்டது போல கொன்றானாம்.)

வயிற்றுவலிக்காரிக்கு மாலைக்கண்ணன் அகமுடையான்.

வயிற்று வலிக்கு இடம் கொடுத்தாலும் வைஷ்ணவனுக்கு இடம் கொடுக்கல் ஆகாது. 19640


வயிற்று வலியை விலை கொடுத்து வாங்குவார்கள்?

வயிற்றை அறுத்தாலும் வாகாய் அறுக்க வேண்டும்.

வயிற்றை அறுத்தாளாம்; வைத்தாளாம் பந்தலில்; இதுதான் உங்கள் சீர் என்றாளாம்.

(என்னடி அம்மா என்றால் பெண்ணுக்கு சீர் என்றாளாம்.)

வயிற்றைக் கட்டினவளுக்கு அகமுடையான்; வாயைக் கட்டினவருக்குப் பிள்ளை.