பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129


வா


வாக்கிலே கெட்ட கழுதையைப் போக்கிலே விட்டுத்திருப்ப வேண்டும்.

(விட்டுத்தான் விட்டு அடி, விட்டுப் பிடி.)

வாக்கிலே சனி.

வாக்கிலே புதன்.

வாக்குக்கு எட்டினது மனசுக்கு எட்ட வில்லை. 19815


வாக்குக் கொடுப்பது மெதுவாகவும், செய்வது விரைவாகவும் இருக்க வேண்டும்.

வரக்குச் சாக்காய் மாட்டிக் கொள்கிறது.

வாக்கும் மனசும் ஒத்து வார்த்தை சொல்ல வேண்டும்.

வாக்கு வயணம் தெரியாமல் பேசுகிறான்.

வாகனம் உள்ளவன் வழி நடிைக்கு அஞ்சான்; பால் உள்ளவன் பந்திக்கு அஞ்சான். 19820

வாகை இளம்பிஞ்சு கண்டவர்கள் இல்லை; வாகான தென்னம்பிள்ளை கண்டவர்களும் இல்லை.

வாங்கி இருந்து துளை என்றார், அப்பம் தின்பார்,

வாங்கிக் கொடுத்த புருஷன் வெளியில் போய்விட்டு வருவதற்குள் நடுக்கிழித்து மூட்டாவிட்டால் நான் என்ன பெண் பிள்ளை என்றாளாம்.

வாங்கித் தின்றவன் வடக்கே போனான்; சீட்டு என்ன செய்யும்?

வாங்கித் தின்னுமாம் வயிறு; விண்ணாரம் பேசுமாம் உதடு. 19825


வாங்கின கடன் கொடாத வல்லாள கண்டன்.

வாங்கின கடனைக் கொடுக்கிறது இல்லை; கொடுத்த கடனைக் கேட்கிறது இல்லை.

(கொடுத்தறியான், கேட்டறியான்.)

வாங்கினபேருக்கு வாய் ஏது? வீங்கின பேருக்கு வெட்கம் ஏது?

வாங்கினதைப் போலக் கொடுக்கவேண்டும்; கொடுத்ததைப் போல வாங்கவேண்டும்.

வாங்கின மோரிலே வெண்ணெய் எடுப்பான். 19830

(தயிரிலே.)