பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தமிழ்ப் பழமொழிகள்


வறுத்த நெல் முளைக்குமா?

வறுத்த பயறு முளைக்குமா?

வறுத்த பயறு முளைத்ததை வையத்தில் கண்டீரோ?

வறுமை உள்ளார்க்குப் பொறுமை உண்டு.

வறுமைக்கு மூதேவியும் செல்வத்துக்குச் சீதேவியும். 19800


வறுமை கண்டவர் வையகத்தில் அநேகர்.

வறுமை வந்தால் பத்தும் பறந்து போம்.

வறை ஓட்டை நக்கினால் வாய் எல்லாம் கரி.

வன்சொல் வணக்கத்திலும் இன்சொல் வணங்காமை நலம்.

வனத்துக்கு வால்மீகி; பேருக்கு வியாசர். 19805


வனத்துப் புலியை மான்குட்டி அடித்தாற்போல.

வனவேடர் மான்கும்பைக் கலைத்து விட்டது போல.

வனாந்தரத்து நுழை நரிகள் இடையர்களின் தீர்க்க விரோதிகள்,

வஜ்ர சும்பன்.

வஜ்ர்ம் அளந்த கையால் வைக்கோல் துரும்பு எடுக்கலாயிற்று. 19810


வஸ்திராபரணம் விசேஷமோ, அன்னம் விசேஷமோ?