பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தமிழ்ப் பழமொழிகள்


வாய் சொல்லும்; பிடரி கும்பிடும்.

வாய்த் தவிடும் போய் அடுப்பு நெருப்பும் அவிந்தது.

(போனது போல.)

வாய்த்தால் கிழவியும் பாடுவாள். 19930


வாய்த்தான் பிழைத்தான் சமாசாரம்.

(பிழைப்பு.)

வாய் தாராளாம், கை கருணைக்கிழங்கு.

வாய்தான் இருக்கிறது, வாய்க்கரிசிக்கு வழி இல்லை.

வாய் திறக்கப் பொய் திறக்கும்.

வாய் நல்லது ஆனால், ஊர் நல்லது. 19935


வாய் நலமோ, ஊர் நலமோ?

வாய்ப் பந்தல் நிழல் தருமா?

வாய்ப் பந்தல் போட யாரால் கூடாது?

(முடியாது.)

வாய்ப் பந்தல் போடுகிறான்.

வாய்ப் பதற்றம் வரிசை கெடுக்கும். 19940


வாய்ப் பேச்சுப் பேசுகிறவன் வளம் இழந்து போவான்.

வாய்ப் பேச்சு வாயில் இருக்கக் கை வைக்க ஆரம்பிக்கிறாய்.

வாய்ப் பேச்சைக் கொண்டு செய்கிறதா? வயிற்றெரிச்சல் கொள்கிறதா?

வாய்ப் பேச்சைப் பிடுங்கி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறது.

(பேச்சைக் கொட்டி.)

வாய் பார்த்தவன் வாழ்வு இழந்தான்; அம்பலம் பார்த்தவன் பெண்டு இழந்தான். 19945

(பார்த்தவன் இழந்தான்.)

வாய் பார்த்தவன் வீட்டில் நாய் காக்கும்.

வாய் பார்த்த வீடு நாய் காக்கும்; வைகாசி மாதம் வறுத்துக் குத்தும்,

வாய் பார்த்த வீடு நாய் கொண்டு போயிற்று.

வாய் பார்த்த வீடு நாய் பார்க்கும்;

(+ வைகாசி மாதத்தில் வறுத்துக் குத்த வேணும் நாய் காக்கும்.)

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ? 19950


வாய் பொய் சொல்ல, மடி பிச்சை கேட்கும்.

(யாழ்ப்பாண வழக்கு.)

வாய் மதத்தால் வழக்கு இழந்தாள்.

(வாழ்க்கை இழந்தாள்.)