பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

135


வாய் முத்து உதிர்ந்து போகுமா?

வாய் மூடாப் பட்டினி, கண்மூடாத் தூக்கம்.

வாய் மூடித் தலையை வெட்டுகிறதா? 19955


வாய் வாழ்த்தாவிடினும் வயிறு வாழ்த்தும்.

வாய் வாழைப்பழம் கேட்குது; கை கருணைக் கிழங்கு கேட்குது.

வாய் வாழைப்பழம்; கை கருணைக் கிழங்கு.

வாயசம் வலம் ஆனால் ஆயுசு விருத்தி ஆகும்.

(வாயசம் - காவசை.)

வாயாடிதான் வல்லவன். 19960


வாயாடி மாப்பிள்ளையாக இருப்பதைக் காட்டிலும் வரகூர்க் கூழைக் கடாவாக இருக்கலாம்.

வாயாடி வார்த்தை மட்டு இல்லாதவை.

வாயாரச் சொன்னால் தாயாரை விற்றுக் கொடு.

வாயாரே, வாயாரே, எங்கே போனாய்? கையாரிடத்திலே கடன் வாங்கப் போனேன்.

வாயால் இல்லை என்பதைக் கையால் இல்லை என்றான். 19965


வாயால் ஊதி வண்டாய்ப் பறக்கிறது.

வாயால் கெட்டாள் திரெளபதி.

வாயால் கேட்டால் வாழைப் பிஞ்சும் கொடான், தண்டித்துக் கேட்டால் தானோடே கொடுப்பான்.

வாயால் சொன்னால் தாயாரை விற்றுக் கொடுக்க வேண்டும்.

வாயால் தின்று வாயால் கக்கும் வெளவாலைப் போல. 19970


வாயால் பந்தல் இடுகிறது போல.

வாயாலே வாழ்வு; வாயாலே கேடு.

வாயில் அடிக்கலாம்; வயிற்றில் அடிக்கப்படாது.

வாயில் இருக்கிறது வழி,

(உண்டு.)

வாயில் இருக்கிறது வார்த்தை 19975


(+ வாயை ஏன் ஆட்டுகிறாய்.)

வாயில் ஈப் புகுந்தது தெரியாமல் கேட்கிறான்.

வாயில் உறவு; மனத்தில் பகை.

வாயில் கொழுக்கட்டையா?

வாயில் போகிறதைக் கக்கிக் கொடுக்கிறது.

வாயில் மண் அடிக்கலாமா? 19980